அன்பே சிவம்

அன்பே சிவம்
அன்பே சிவம்

வியாழன், 6 ஜனவரி, 2011

தில்லை வாழ் அந்தணர் சருக்கம்

திருநீலகண்ட நாயனார் புராணம்

 1. வேதியர் தில்லை மூதூர் வேட் கோவர் குலத்து வந்தார்  0360-1
 மாதொரு பாகம் நோக்கி மன்னு சிற்றம்பலத்தே  0360-2
 ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக் கூத்து ஆடும்  0360-3
 நாதனார் கழல்கள் வாழ்தி வழிபடும் நலத்தின் மிக்கார்  0360-4

 2. பொய் கடிந்து அறத்தின் வாழ்வார் புனற் சடை 
    முடியார்க்கு அன்பர்  0361-1
 மெய் அடியார் கட்கு ஆன செயும் விருப்பில் நின்றார்  0361-2
 வையகம் போற்றும் செய்கை மனை அறம் புரிந்து வாழ்வார்  0361-3
 சைவ மெய்த் திருவின் சார்வே பொருள் எனச் சாரு நீரார்  0361-4

 3. அளவிலா மரபின் வாழ்க்கை மண் கலம் 
    அமுதுக்கு ஆக்கி  0362-1
 வளரிளம் திங்கள் கண்ணி மன்றுளார் அடியார்க்கு என்றும்  0362-2
 உள மகிழ் சிறப்பின் மல்க ஓடு அளித்து ஒழுகும் நாளில்  0362-3
 இளமை மீது ஊர இன்பத் துறையினில் எளியர் ஆனார்  0362-4

 4. அவர் தம் கண் மனைவியாரும் அருந்ததி கற்பின் மிக்கார்  0363-1
 புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சு உண்ண யாம் செய்  0363-2
 தவ நின்று அடுத்தது என்னத் தகைந்து தான் தரித்தது என்று  0363-3
 சிவன் எந்தை கண்டம் தன்னைத் திரு நீல கண்டம் என்பார்  0363-4

 5. ஆன தம் கேள்வர் அங்கோர் பரத்தை பால் 
    அணைந்து நண்ண  0364-1
 மானமுன் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை  0364-2
 ஏனைய எல்லாஞ் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார்  0364-3
 தேனலர் கமலப் போதில் திருவினும் உருவம் மிக்கார்  0364-4

 6. மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று  0365-1
 பூண்டயங்கு இளமென் சாயல் பொன் கொடி 
    அனையார் தம்மை  0365-2
 வேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில்  0365-3
 தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம் என்றார்  0365-4

 7. ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம்  0366-1
 பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி  0366-2
 ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை  0366-3
 மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன் என்றார்  0366-4

 8. கற்புறு மனைவியாரும் கணவனார்க்கு ஆன எல்லாம்  0367-1
 பொற்புற மெய் உறாமல் பொருந்துவ போற்றிச் செய்ய  0367-2
 இல் புறம்பு ஒழியாது அங் கண் இருவரும் வேறு வைகி  0367-3
 அன்புறு புணர்ச்சி இன்மை அயலறியாமை வாழ்ந்தார்  0367-4

 9. இளமையின் மிக்குளார்கள் இருவரும் அறிய நின்ற  0368-1
 அளவில் சீர் ஆணை போற்றி ஆண்டுகள் பலவும் செல்ல  0368-2
 வள மலி இளமை நீங்கி வடிவுறு மூப்பு வந்து  0368-3
 தளர்வொடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்துச் சாயார்  0368-4

 10. இந் நெறி ஒழுகும் நாளில் எரி தளர்ந்தது என்ன நீண்ட  0369-1
 மின்னொளிர் சடையோன் தானுந் தொண்டரை 
     விளக்கங் காண  0369-2
 நன்னெறி இதுவாம் என்று ஞாலத்தார் விரும்பி உய்யும்  0369-3
 அந் நெறி காட்டும் ஆற்றல் அருள் சிவ யோகி ஆகி  0369-4

 11. கீள் ஒடு கோவணம் சாத்திக் கேடு இலா  0370-1
 வாள் விடு நீற்று ஒளி மலர்ந்த மேனி மெல்  0370-2
 தோளடு மார்பிடைத் துவளும் நூலுடன்  0370-3
 நீளளி வளர் திரு முண்ட நெற்றியும்  0370-4
12. நெடுஞ் சடை கரந்திட நெறித்த பம்பையும் 0371-1 விடுங் கதிர் முறுவல் வெண்ணிலவும் மேம்பட 0371-2 இடும் பலிப் பாத்திரம் ஏந்து கையராய் 0371-3 நடந்து வேட்கோவர் தம் மனையில் நண்ணினார் 0371-4 13. நண்ணிய தவச் சிவ யோக நாதரைக் 0372-1 கண்ணுற நோக்கிய காதல் அன்பர் தாம் 0372-2 புண்ணியத் தொண்டராம் என்று போற்றி செய்து 0372-3 எண்ணிய வகையினால் எதிர் கொண்டு ஏத்தினார் 0372-4 14. பிறை வளர் சடை முடிப் பிரானைத் தொண்டர் என்று 0373-1 உறை உளில் அணைந்து பேர் உவகை கூர்ந்திட 0373-2 முறைமையின் வழி பட மொழிந்த பூசைகள் 0373-3 நிறை பெரு விருப்பொடு செய்து நின்ற பின் 0373-4 15. எம்பிரான் யான் செயும் பணி எது என்றனர் 0374-1 வம்புலா மலர்ச் சடை வள்ளல் தொண்டனார் 0374-2 உம்பர் நாயகனும் இவ்வோடு நின்பால் வைத்து 0374-3 நம்பி நீ தருக நாம் வேண்டும் போது என்று 0374-4 16. தன்னை ஒப்பு அரியது தலத்துத் தன் உழைத் 0375-1 துன்னிய யாவையும் தூய்மை செய்வது 0375-2 பொன்னினும் மணியினும் போற்ற வேண்டுவது 0375-3 இன்ன தன்மையது இது வாங்கு நீ என 0375-4 17. தொல்லை வேட்கோவர் தம் குலத்துள் தோன்றிய 0376-1 மல்கு சீர்த் தொண்டனார் வணங்கி வாங்கிக் கொண்டு 0376-2 ஒல்லையின் மனையில் ஓர் மருங்கு காப்புறும் 0376-3 எல்லையில் வைத்து வந்து இறையை எய்தினார் 0376-4 18. வைத்த பின் மறையவர் ஆகி வந்து அருள் 0377-1 நித்தனார் நீங்கிட நின்ற தொண்டரும் 0377-2 உய்த்து உடன் போய் விடை கொண்டு மீண்டனர் 0377-3 அத்தர் தாம் அம்பலம் அணைய மேவினார் 0377-4 19. சால நாள் கழிந்த பின்பு தலைவனார் தாம் முன் வைத்த 0378-1 கோலமார் ஓடு தன்னைக் குறி இடத்து அகலப் போக்கிச் 0378-2 சீலமார் கொள்கை என்றும் திருந்து வேட்கோவர் தம்பால் 0378-3 வாலி தாம் நிலைமை காட்ட முன்பு போல் மனையில் வந்தார் 0378-4 20. வந்த பின் தொண்டனாரும் எதிர் வழி பாடு செய்து 0379-1 சிந்தை செய்து அருளில் எங்கள் செய்தவம் என்று நிற்ப 0379-2 முந்தை நாள் உன்பால் வைத்த மெய்யொளி விளங்கும் ஓடு 0379-3 தந்து நில் என்றான் எல்லாம் தான் வைத்து வாங்க வல்லான் 0379-4 21. என்றவர் விரைந்து கூற இருந்தவர் ஈந்த ஓடு 0380-1 சென்று முன் கொணர்வான் புக்கார் கண்டிலர் திகைத்து நோக்கி 0380-2 நின்றவர் தம்மைக் கேட்டார் தேடியும் காணார் மாயை 0380-3 ஒன்றும் அங்கு அறிந்திலார் தாம் உரைப்பது ஒன்று இன்றி நின்றார் 0380-4 22. மறையவன் ஆகி நின்ற மலைமகள் கேள்வன் தானும் 0381-1 உறை உளில் புக்கு நின்ற ஒரு பெருந் தொண்டர் கேட்ட 0381-2 இறையில் இங்கு எய்தப் புக்காய் தாழ்த்தது என் என்ன வந்து 0381-3 கறை மறை மிடற்றினானைக் கை தொழுது உரைக்கல் உற்றார் 0381-4 23. இழையணி முந்நூல் மார்பின் எந்தை நீர் தந்து போன 0382-1 விழை தகும் ஓடு வைத்த வேறு இடம் தேடிக் காணேன் 0382-2 பழைய மற்று அதனில் நல்ல பாத்திரம் தருவன் கொண்டு இப் 0382-3 பிழையினைப் பொறுக்க வேண்டும் பெரும என்று இறைஞ்சி நின்றார் 0382-4 24. சென்னியால் வணங்கி நின்ற தொண்டரைச் செயிர்த்து நோக்கி 0383-1 என்னிது மொழிந்தவா நீ யான் வைத்த மண் ஓடு அன்றிப் 0383-2 பொன்னினால் அமைத்துத் தந்தாய் ஆயினுங் கொள்ளேன் போற்ற 0383-3 முன்னை நான் வைத்த ஓடே கொண்டு வா என்றான் முன்னோன் 0383-4 25. கேடு இலாப் பெரியோய் என்பால் வைத்தது கெடுதலாலே 0384-1 நாடியும் காணேன் வேறு நல்லது ஓர் ஓடு சால 0384-2 நீடு செல்வது தான் ஒன்று தருகிறேன் எனவும் கொள்ளாது 0384-3 ஊடி நின்று உரைத்தது என் தன் உணர்வு எலாம் ஒழித்தது என்ன 0384-4 26. ஆவதென் உன்பால் வைத்த அடைக்கலப் பொருளை வௌவிப் 0385-1 பாவகம் பலவும் செய்து பழிக்கு நீ ஒன்றும் நாணாய் 0385-2 யாவரும் காண உன்னை வளைத்து நான் கொண்டே அன்றிப் 0385-3 போவதும் செய்யேன் என்றான் புண்ணியப் பொருளாய் நின்றான் 0385-4 27. வளத்தினால் மிக்க ஓடு வௌவினேன் அல்லேன் ஒல்லை 0386-1 உளத்தினும் களவிலாமைக்கு என் செய்கேன் உரையும் என்ன 0386-2 களத்து நஞ்சு ஒளித்து நின்றான் காதல் உன் மகனைப் பற்றிக் 0386-3 குளத்தினில் மூழ்கிப் போ என்று அருளினான் கொடுமை இல்லான் 0386-4 28. ஐயர் நீர் அருளிச் செய்த வண்ணம் யான் செய்வதற்குப் 0387-1 பொய்யில் சீர்ப் புதல்வன் இல்லை என் செய்கேன் புகலும் என்ன 0387-2 மையறு சிறப்பின் மிக்க மனையவள் தன்னைப் பற்றி 0387-3 மொய் அலர் வாவி புக்கு மூழ்குவாய் என மொழிந்தார் 0387-4 29. கங்கை நதி கரந்த சடை கரந்து அருளி எதிர் நின்ற 0388-1 வெங் கண் விடையவர் அருள வேட்கோவர் உரைசெய்வார் 0388-2 எங்களில் ஓர் சபதத்தால் உடன் மூழ்க இசைவு இல்லை 0388-3 பொங்கு புனல் யான்மூழ்கித் தருகின்றேன் போதும் என 0388-4 30. தந்தது முன் தாராதே கொள்ளாமைக்கு உன் மனைவி 0389-1 அந் தளிர்ச் செங் கைப்பற்றி அலை புனலில் மூழ்காதே 0389-2 சிந்தை வலித்து இருக்கின்றாய் தில்லை வாழ் அந்தணர்கள் 0389-3 வந்து இருந்த பேர் அவையில் மன்னுவன் யான் எனச் சென்றார் 0389-4 31. நல் ஒழுக்கம் தலை நின்றார் நான் மறையின் துறை போனார் 0390-1 தில்லை வாழ் அந்தணர்கள் வந்து இருந்த திருந்தவையில் 0390-2 எல்லை இலான் முன் செல்ல இருந்தொண்டர் அவர் தாமும் 0390-3 மல்கு பெரும் காதலினால் வழக்கு மேலிட்டு அணைந்தார் 0390-4 32. அந்தணன் ஆம் எந்தை பிரான் அரு மறையோர் முன் பகர்வான் 0391-1 இந்த வேட்கோவன்பால் யான் வைத்த பாத்திரத்தைத் 0391-2 தந்து ஒழியான் கெடுத்தானேல் தன் மனைவி கைப்பற்றி 0391-3 வந்து மூழ்கியும் தாரான் வலி செய்கின்றான் என்றார் 0391-4 33. நறை கமழும் சடை முடியும் நாற்றோளும் முக் கண்ணும் 0392-1 கறை மருவும் திரு மிடரும் கரந்து அருளி எழுந்து அருளும் 0392-2 மறையவன் இத்திறம் மொழிய மா மறையோர் உரை செய்வார் 0392-3 நிறையுடைய வேட்கோவர் நீர் மொழியும் புகுந்தது என 0392-4 34. நீணிதியாம் இது என்று நின்ற இவர் தரும் ஓடு 0393-1 பேணி நான் வைத்த இடம் பெயர்ந்து கரந்தது காணேன் 0393-2 பூண் அணி நூல் மணி மார்பீர் புகுந்த பரிசு இது என்று 0393-3 சேணிடையும் தீங்கு அடையாத் திருத்தொண்டர் உரைசெய்தார் 0393-4 35. திருவுடை அந்தணாளர் செப்புவார் திகழ்ந்த நீற்றின் 0394-1 உருவுடை இவர் தாம் வைத்த ஓட்டினைக் கொடுத்தீர் ஆனால் 0394-2 தருமிவர் குளத்தில் மூழ்கித் தருக என்று உரைத்தார் ஆகில் 0394-3 மருவிய மனைவியொடு மூழ்குதல் வழக்கே என்றார் 0394-4 36. அருந் தவத் தொண்டர் தாமும் அந்தணர் மொழியக் கேட்டுத் 0395-1 திருந்திய மனைவியாரைத் தீண்டாமை செப்ப மாட்டார் 0395-2 பொருந்திய வகையால் மூழ்கித் தருகின்றேன் போதும் என்று 0395-3 பெருந் தவ முனிவரோடும் பெயர்ந்து தம் மனையைச் சார்ந்தார் 0395-4 37. மனைவியார் தம்மைக் கொண்டு மறைச் சிவ யோகியார் முன் 0396-1 சினவிடைப் பாகர் மேவும் திருப்புலீச் சுரத்து முன்னர் 0396-2 நனை மலர்ச் சோலை வாவி நண்ணித் தம் உண்மை காப்பார் 0396-3 புனை மணி வேணுத் தண்டின் இரு தலை பிடித்துப் புக்கார் 0396-4 38. தண்டிரு தலையும் பற்றிப் புகும் அவர் தம்மை நோக்கி 0397-1 வெண் திரு நீற்று முண்ட வேதியர் மாதைத் தீண்டிக் 0397-2 கொண்டு உடன் மூழ்கீர் என்னக் கூடாமை பாரோர் கேட்கப் 0397-3 பண்டு தம் செய்கை சொல்லி மூழ்கினார் பழுது இலாதார் 0397-4 39. வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவி யாரும் 0398-1 மேவிய மூப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்றுத் 0398-2 தேவரும் முனிவர் தாமும் சிறப்பொடு பொழியுந் தெய்வப் 0398-3 பூவின் மா மழையின் மீள மூழ்குவார் போன்று தோன்ற 0398-4 40. அந்நிலை அவரைக் காணும் அதிசயம் கண்டார் எல்லாம் 0399-1 முன்நிலை நின்ற வேத முதல் வரைக் கண்டார் இல்லை 0399-2 இந்நிலை இருந்த வண்ணம் என் என மருண்டு நின்றார் 0399-3 துன்னிய விசும்பின் ஊடு துணையுடன் விடை மேல் கொண்டார் 0399-4 41. கண்டனர் கைகளாரத் தொழுதனர் கலந்த காதல் 0400-1 அண்டரும் ஏத்தினார்கள் அன்பர்தம் பெருமை நோக்கி 0400-2 விண்டரும் பொலிவு காட்டி விடையின் மேல் வருவார் தம்மைத் 0400-3 தொண்டரும் மனைவியாரும் தொழுது உடன் போற்றி நின்றார் 0400-4 42. மன்றுளே திருக் கூத்து ஆடி அடியவர் மனைகள் தோறும் 0401-1 சென்றவர் நிலைமை காட்டும் தேவர்கள் தேவர் தாமும் 0401-2 வென்ற ஐம் புலனால் மிக்கீர் விருப்புடன் இருக்க நம்பால் 0401-3 என்றும் இவ் இளமை நீங்காது என்று எழுந்து அருளினாரே 0401-4 43. விறலுடைத் தொண்டனாரும் வெண்ணகைச் செவ்வாய் மென் தோள் 0402-1 அறல் இயல் கூந்தல் ஆளாம் மனைவியும் அருளின் ஆர்ந்த 0402-2 திறலுடைச் செய்கை செய்து சிவலோகம் அதனை எய்திப் 0402-3 பெறல் அரும் இளமை பெற்றுப் பேர் இன்பம் உற்றார் அன்றே 0402-4 44. அயல் அறியாத வண்ணம் அண்ணலார் ஆணை உய்த்த 0403-1 மயலில் சீர்த் தொண்டனாரை யான் அறிவகையால் வாழ்த்திப் 0403-2 புயல் வளர் மாடம் நீடும் பூம்புகார் வணிகர் பொய்யில் 0403-3 செயல் இயற் பகையார் செய்த திருத் தொண்டு செப்பல் உற்றேன் 0403-4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக