அன்பே சிவம்

அன்பே சிவம்
அன்பே சிவம்

செவ்வாய், 17 மே, 2011

தரித்திர நிலை நீக்கி செல்வ வளம் சேர்க்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷரீ ஸ்லோகம்!

உயிர்கள்
இம்மையில் இகலோகப் பேறுகளையும், மறுமையில் அளவில்லாத பேரின்பத்தையும்
பெறுவதற்கு சிவபூஜை மிகச் சிறந்ததாகும். தீவினைகளை அகற்றி சகல நன்மைகளையும்
அளிக்க வல்லவர் சிவபெருமான். அந்த சிவபெருமானை கீழ்க்கண்ட ஸ்லோகத்தால்
தினமும் வழிபட்டால் தரித்திர நிலை நீங்கி செல்வ வளம் சேரும்.


ஸ்ரீசிவ பஞ்சாக்ஷரீ ஸ்லோகம்

விஸ்வேஸ்வராய நரகார்ணவ தாரணாய

ஜ்ஞாநப்ரதாய கருணாம்ருத ஸாகராய/

கற்பூர குந்த தவலாய ஜடாதராய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//


லோகோத்தராய புஜகாதிப கங்கணாய

கங்காதராய கஜதாநவ மர்தநாய/

கௌரீ ப்ரியாய சசிபால கலாதராய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//


பாநுப்ரியாய பவஸாகர நாசநாய

காமாந்தகாய கமலாப்ரிய பூஜிதாய/

நேத்ரத்ரயாய சுபலக்ஷண ஸம்ஸ்திதாய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//



பக்தப்ரியாய பவரோக பயாவஹாய

திவ்யாத்ரி திவ்யபவநாய குணார்ணவாய/

தேஜோமயாய நிகிலாகம ஸம்ஸ்துதாய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//



சர்மாம்பராய சவபஸ்ம விலேபநாய

பாலேக்ஷணாய மணிகுண்டல மண்டிதாய/

மஞ்ஜீரபாத யுகலாய வ்ருஷத்வஜாய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//



பஞ்சாநநாய பணிராஜ விபூஷணாய

ஸ்வர்காபவர்க பலதாய மகேஸ்வராய/

ஹேமாம்சுகாய புவநத்ரய வந்திதாய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//



முக்தாய யக்ஞபலதாய கணேஸ்வராய

கீதப்ரியாய வ்ருஷபேஸ்வர வாஹநாய/

மாதங்க சர்மவஸநாய மஹேஸ்வராய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//



ராமப்ரியாய ரகுநாத வரப்ரதாய

புண்யாய புண்யசரிதாய ஸுரேஸ்வராய/

நந்திப்ரியாய நகராஜ ஸுதாப்ரியாய

தாரித்ர்ய துக்க தஹநாய நம: சிவாய//



பக்த்யாச துக்க தஹநாஷ்டக மீஸ்வரஸ்ய

ஸங்கீர்தயேத் புரத ரவ பிநாகபாணே/

யஸ்தஸ்ய ஸைலஸீதயா பரிரப்த தேஹோ

ருத்ரோ ததாத்யம்ருத மிஷ்ட மநந்தலக்ஷம்//

மங்களம்.

ஸ்ரீ லலிதாம்பிகை நவரத்ன மாலை

காப்பு ஆக்கும் தொழில் ஐங்கரனாற்றநலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரிபால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே !








வைரம்
கற்றும் தெளியார் காடே கதியாய்க்
கண்மூடி நெடுக் கனவான தவம்
பெற்றும் தெளியார் நினையென்னில் அவம்
பெருகும் பிழையேன் பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க் கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !








நீலம்
மூலக்கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக் கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய்
நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக் குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !








முத்து
முத்தே வருமுத் தொழிலாற் றிடவே
முன்னின் றருளும் முதல்வீ சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாஸினியே சரணம்
தந்தே யறிநான் தனயன் தாய்நீ
சாகா தவரம் தரவே வருவாய்
மத்தே றுததிக் கிணைவாழ் வடையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !








பவளம்
அந்தி மயங்கிய வானவி தானம்
அன்னம் நடை செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிரம்ப வளம் பொழி யாரோ
தேம்பொழி லாமிது செய்தவ ளாரோ
எந்தையிடத்து மனத்தும் இருப்பாள்
எண்ணு வர்க்கருள் எண்ண மிகுந்தாள்
மந்திர வேத மயப் பொரு ளானாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !








மாணிக்கம்
காணக் கிடையாக் கதியா னவளே
கருதக் கிடையாக் கலையானவளே
பூணக் கிடையாப் பொலி வானவளே
புனையக் கிடையாப் புதுமையானவளே
நாணித் திருநாமமும் நின்துதியும்
நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !








மரகதம்
மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதி லயமே இசையே சரணம்
அரஹர சிவ என்றடியவர் குழம
அவரருள் பெற அருளமுதே சரணம்
வரநவ நிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !








கோமேதகம்
பூமே வியநான் புரியும் செயல்கள்
பொன்றாது பயன் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெயசக்தி யெனத்
திடமாய் அடியேன் மொழியுந் திறமும்
கோமே தகமே குளிர்வான் நிலவே
குழல்வாய் மொழியே தருவாய் தருவாய்
மாமே ருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !








பதுமராகம்
ரஞ்சனி நந்தினி அங்கனி பதும
ராகலி சாஸவி யாமினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத சொரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேஸ ச்ருங்க நிவாஸினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !








[b]வைடூரியம் [/b]
வலையொத்த வினை கலையொத்த மனம்
மருளப் பறையா றொலியொத் தவிதால்
நிலையற் றெளியேன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையற் றசைவற்றது பூதி பெரும்
அடியாற் முடிவாழ் வைடூரியமே
மலையத் துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே !








நூற் பயன்
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி யெல்லாம்
சிவரத்தினமாய்த் திகழ்வாரவாரே !!!!

புத்திர லாபம் மற்றும் ஸர்வ பாக்கியங் களைத் பெற