அன்பே சிவம்

அன்பே சிவம்
அன்பே சிவம்

செவ்வாய், 11 ஜனவரி, 2011

பதினெட்டு சித்தர்கள்

சித்தர்கள் என்றல் யார்? என்றும் தமிழ் சித்தர்கள் பதினெட்டு என்றும் கிடைத்த தகவல்களை பார்த்தோம்.

அருளும், அன்பும், சிவமும், அளவற்ற சக்தியையும் ஒருங்கே பெற்றுள்ள அந்த பதினெட்டு சித்தர்கள் திரு உருவங்களும், பெயரும், இன்றும் அவர்கள் அருள் தரும் சன்னதிகளின் விவரம் பற்றி தகவல்களை இங்கு பார்ப்போம்.

1- திருமூலர் - திருவாவடுதுறை

2- இராமதேவர் - அழகர்மலை

3- அகஸ்தியர் - திருவனந்தபுரம்

4- கொங்கணர் - திருப்பதி

5- கமலமுனி - திருவாரூர்

6- சட்டமுனி - திருவரங்கம்

7- கரூவூரார் - கரூர்

8- சுந்தரனார் - மதுரை

9- வான்மீகர் - எட்டிக்குடி

10- நந்திதேவர் - காசி

11- பாம்பாட்டி சித்தர் - சங்கரன்கோவில்

12- போகர் - பழனி

13- மச்சமுனி - திருப்பரங்குன்றம்

14- பதஞ்சலி - இராமேஸ்வரம்

15- தன்வந்திரி - வைதீஸ்வரன்கோவில்

16- கோரக்கர் - பேரூர்

17- குதம்பை சித்தர் - மாயவரம்

18- இடைக்காடர் - திருவண்ணாமலை
பதினெட்டு சித்தர்கள்களின் திரு உருவங்கள்.


மேல் சொன்ன பதினெண் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி குறிப்பிடும், நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்தில் உள்ள பழைய ஓலைச்சுவடியின் சான்று.

ஆதி காலத்திலே
ஆவடுதுறை திருமூலர்
அழகுமலை இராமதேவர்
அனந்த சயன கும்பழனி திருப்பதி கொங்கணவர்
கமலமுனி ஆரூர்
சோதி அரங்க சட்டமுனி கருவை கருவூரார்
சுந்தரானந்தர் கூடல்
சொல்லும் எட்டிக்குடியில் வான்மீகரோடு நற்
றாள் காசி நந்திதேவர்
ப்லாதி அரிச்சங்கரன் கோவில் பாம்பாட்டி
பழனி மலை போகநாதர்
திருப்பரங்குன்றமதில் மச்சமுனி
பதஞ்சலி இராமேசுவரம்
சோதி வைத்தீஸ்வரம் கோவில் தன்சந்திரி பேரையூர்
கோரக்கர் மாயூரங்குதம்பர்
திருவருணையோர் இடைக்காட சமாதியிற்
சேர்ந்தனர் எமைக் காக்கவே.

இது தவிர, மதுரை அழகர் கோவிலின் முன்பாக பதினெட்டாம் படி கருப்பண்ணசாமியாக உள்ள "பதினெட்டு படிகளும்", இந்த பதினெட்டு சித்தர்கள் ஆவார்கள். இவர்களுக்கு இங்கு ஆடி பதினெட்டு அன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது.

முதலில் சொன்னது போல், இந்த பதினெண் சித்தர்கள் பெயரிலும் பல கருத்தக்கள் கிடைக்கின்றன, அவற்றில் எனக்கு கிடைத்த சில,

1. கும்ப முனி, 2. நந்தி முனி, 3. கோரக்கர், 4. புலிப்பாணி, 5. புகண்ட ரிஷி, 6. திருமுலர், 7. தேரையர், 8. யூகி முனி, 9. மச்சமுனி, 10. புண்ணாக்கீசர், 11. இடைக்காடர், 12. பூனைக் கண்ணன், 13. சிவவாக்யர், 14. சண்டிகேசர், 15. உரோமருஷி, 16. சட்டநாதர், 17. காலாங்கி, 18. போகர் என்று கருவூரார் எழுதிய அட்டமாசித்து நூல் கூறுகிறது.

1. அகத்தியர், 2. போகர், 3. நந்தீசர், 4. புண்ணாக்கீசர், 5. கருவூரார், 6. சுந்தரானந்தர், 7. ஆனந்தர், 8. கொங்கணர், 9. பிரம்மமுனி, 10. உரோமமுனி, 11. வாசமுனி, 12. அமலமுனி, 13. கமலமுனி, 14. கோரக்கர், 15. சட்டைமுனி, 16. மச்சமுனி, 17. இடைக்காடர், 18. பிரம்மமுனி என்கிறது நிஜானந்த போதம்.

1. அகத்தியர், 2. போகர், 3. கோரக்கர், 4. கைலாசநாதர், 5. சட்டைமுனி, 6. திருமுலர், 7. நந்தி, 8. கூன் கண்ணன், 9. கொங்கனர், 10. மச்சமுனி, 11. வாசமுனி, 12. கூர்மமுனி, 13. கமலமுனி, 14. இடைக்காடர், 15. உரோமருஷி, 16. புண்ணாக்கீசர், 17. சுந்தரனானந்தர், 18. பிரம்மமுனி என்கிறது அபிதான சிந்தாமணி.
இனி இந்த சித்தர்ககள் வாழ்ந்த மற்றும் வாழும் காலத்தை இங்கு பார்ப்போம்.

எண் - சித்தரின் பெயர் - பிறந்த மாதம் - நட்சத்திரம் - வாழ்நாள் - சமாதியடைந்த இடம்.


1- திருமூலர் - புரட்டாதி – அவிட்டம் - 3000 வருடம் 13 நாட்கள் –
திருவாவடுதுறை.

2- இராமதேவர்– மாசி – பூரம் - 700 வருடம் 06 நாட்கள் – அழகர்மலை.

3- அகத்தியர் – மார்கழி – ஆயில்யம் - 4யுகம் 48 நாட்கள் - திருவனந்தபுரம்.

4- கொங்கணர் – சித்திரை – உத்திராடம் - 800 வருடம் 16 நாட்கள் – திருப்பதி.

5- கமலமுனி – வைகாசி – பூசம் - 4000 வருடம் 48 நாட்கள் திருவாரூர்.

6- சட்டமுனி – ஆவணி - மிருகசீரிடம் - 800 வருடம் 14 நாட்கள் – திருவரங்கம்.

7- கருவூரார் – சித்திரை – அஸ்தம் - 300 வருடம் 42 நாட்கள் – கருவூர்(கரூர்).

8- சுந்தரானந்தர் – ஆவணி – ரேவதி - 800 வருடம் 28 நாட்கள் – மதுரை.

9- வான்மீகர் – புரட்டாதி – அனுசம் - 700 வருடம் 32 நாட்கள் – எட்டுக்குடி.

10- நந்திதேவர் –வைகாசி – விசாகம் - 700 வருடம் 03 நாட்கள் – காசி.

11- பாம்பாட்டி சித்தர் – கார்த்திகை – மிருகசீரிடம் - 123 வருடம் 14 நாட்கள் – சங்கரன்கோவில்.

12- போகர் – வைகாசி – பரணி - 300 வருடம் 18 நாட்கள் – பழனி.

13- மச்சமுனி – ஆடி – ரோகிணி - 300 வருடம் 62 நாட்கள் – திருப்பரங்குன்றம்.

14- பதஞ்சலி – பங்குனி – மூலம் - 5யுகம் 7நாட்கள் - இராமேசுவரம்.

15- தன்வந்திரி – ஐப்பசி – புனர்பூசம் - 800 வருடம் 32 நாட்கள் – வைத்தீச்வரன்கோவில்.

16- கோரக்கர் – கார்த்திகை- ஆயில்யம் - 880 வருடம் 11 நாட்கள் – பேரூர்.

17- குதம்பை சித்தர் – ஆடி – விசாகம் - 1800 வருடம் 16 நாட்கள் – மாயவரம்.

18- இடைக்காடர் – புரட்டாதி – திருவாதிரை - 600 வருடம் 18 நாட்கள் – திருவண்ணாமலை.
சித்தர்களின் யோகம் மற்றும் யோக முறைகள்

'யோகம்' என்பது 'யுஜ்' என்பதிலிருந்து 'யோக்' ஆகி வந்திருக்கிறது. அதாவது இணைத்தல் என்ற பொருளில். சிதறும் மனச் சக்தியைக் கூட்டுதல், ஆதியில் இருந்த நிலையில் தன்னைச் சேர்த்தல், யாதுமான சக்தியினிடம் சரணாகதியடைந்து அதனுடன் தன்னைச் சேர்த்தல், விசேஷ புருஷன் அல்லது இறைவனுடன் தன்னை இணைத்தல், - இதுவே யோகம்.
யோக, சமாதி நிலையை அடைய எட்டு அங்கங்களான


1- இயம,
2- நியம,
3- ஆசன,
4- பிராணாயாம,
5- பிரத்தியாகார,
6- தாரண,
7- தியான,
8- சமாதி.

எனப்படும் எட்டு படிகள் கூறப்பட்டதால் இந்த யோகம் 'அஷ்ட்டாங்க யோகம்' எனப்படும், யோக வழியை மனித இனத்துக்குத் தந்தவர் 'ஹிரண்யகர்பர்' என்பவராம். அதை சூத்திரங்களாக்கி வைத்தவர் "மஹரிஷி பதஞ்சலி" என்று சொல்லப்படுகிறது.

அறிவுச் செய்திகளை மறை பொருட்களை உள்ளடக்கி சூத்திரங்களாக வைத்தவர்கள், வேத உண்மைகளை பிரும்ம சூத்திரங்களாக வியாஸரும், பக்தி சூத்திரங்களை நாரதரும்,யோக சூத்திரங்களை பதஞ்சலி முனிவரும் மானிடம் உய்ய செய்துவைத்தனர். இவரை ஆதிசேஷனின் அவதாரமாக சொல்வர். நாரயணனின் படுக்கையே ஆதிசேஷன், சக்தியின் ஒரு விரல் மோதிரமாகியவர், இவ்வுலகை தன் தலையில் தாங்கிக்கொண்டிருப்பவர் எனவும் சொல்கிறார்கள்.

இவர் தந்தை: அத்திரி முனிவர்.

இவர் தாய்: கோணிகா.

இவரின் வேறு பெயர்கள்: அத்ரியின் பிள்ளையாகையால் 'ஆத்திரேயர்', கோணிகாவின் பிள்ளையென்பதால் 'கோணிகாபுத்திரர்'.

இவர் எழுதிய மூன்று நூல்கள்


1- யோகத்தினை விளக்கும் 'யோக சாஸ்திரம்',
2- மொழி இலக்கணமான 'மஹாபாஷ்யம்',
3- ஆயுர் வேத்மாகிய 'சரகம்' என்ற 'ஆத்திரேய சம்ஹிதை'.

ஆக மனம், வாக்கு, உடலு(மெய்)க்கான மூன்று நூல்களைச் செய்தவராகிறார்.

இந்த யோக நிலையை அடையுமுன், உலக வாழ்க்கையில் மேலாக எனப்படும் பொருள், புகழ், திறமை, பலம், சுகம் அடைவதற்கான எட்டு மஹா யோக 'சித்தி'களும் ஏற்படும்


யோக 'சித்தி' என்பது என்ன என்று தேடினால்?

அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகள் ஆகும். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும் அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர்.
அட்டமா சித்திகள்

1- அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.

2- மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.

3- இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.

4- கரிமா - மலைகளாலும், வாயுவினாலும் அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.

5- பிராத்தி - மனத்தினால் நினைத்தவை யாவும் தன் முன்னே அடைய, அவற்றைப் பெறுதல்.

6- பிராகாமியம் - கூடு விட்டுக் கூடு பாய்தல்.

7- வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.

8- ஈசத்துவம்(இறைத்துவம்) - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.

என்ற பல வியக்க வைக்கும் தகவல்கள் கிடக்கிறது.

ஆகவே, இந்த கலி காலத்தில் இறைவனை அடைய, மேல் சொன்ன சித்தர்களின் வாழ்வை படித்து அவர்கள் வாக்குப்படி நடப்போம்.
கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார்
அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்
"சேக்கிழார் சுவாமிகள் புராணம்"


சிவசிவ
திருச்செந்திலாண்டவன் துணை

    பாயிரம்

    விநாயகர்

    வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்
    பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
    ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்
    ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்
    1

    சபாநாதர்

    சீராருஞ் சதுர்மறையும் தில்லைவா ழந்தணரும்
    பாராரும் புலிமுனியும் பதஞ்சலியும் தொழுதேத்த
    வாராருங் கடல்புடைசூழ் வையமெலாற் ஈடேற
    ஏராரு மணிமன்றுள் எடுத்ததிரு வடிபோற்றி
    2

    சிவகாமசுந்தரி

    பரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இருள்நீங்கச்
    சிரந்தழுவு சமயநெறித் திருநீற்றின் ஒளிவிளங்க
    அரந்தைகெட புகலியர்கோன் அமுதுசெயத் திருமுலைப்பால்
    சுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல்போற்றி
    3

    கற்பக விநாயகர்

    மலரயனுந் திருமாலுங் காணாமை மதிமயங்கப்
    புலிமுனியும் பதஞ்சலியுங் கண்டுதொழப் புரிசடையார்
    குலவுநடந் தருந்தில்லைக் குடதிசைக் கோபுரவாயில்
    நிலவியகற் பகக்கன்றின் நிரைமலர்த்தா ளிணைபோற்றி
    4

    சுப்ரமணியர்

    பாறுமுக மும்பொருந்தப் பருந்துவிருந் துணக்கழுகு
    நூறுமுக மாயணைந்து நூழில்படு களம்புகுத
    மாறுமுகந் தருநிருதர் மடியவடி வேலெடுத்த
    ஆறுமுகன் திருவடித்தா மறையிணைக ளவைபோற்றி
    5

    சைவ சமயாசாரியார்

    பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
    ஆழிமிசை கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
    வாழிதிரு நாவலுர் வன்றொண்டர் பதம்போற்றி
    ஊழிமலி திருவாத வூரர்திருத் தாள்போற்றி
    6

    திருத்தொண்டர் - சேக்கிழார்

    தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
    தொல்லையதாந் திருத்தொண்டத் தெகையடியார் பதம்போற்றி
    ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
    செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழார ரடிபோற்றி
    7

    நூற்பெயர்

    தாய்மலர்ந்த முகத்தினளாய்த் தழுவிமுலை தரவந்த
    நோய்மலர்ந்த பிறவிதொறு நுழையாமல் உலகுய்யத்
    தீமலர்ந்த சடைக்கூத்தர் திருவருளாற் சேக்கிழார்
    வாய்மலர்ந்த புராணத்தின் வரலாறு விரித்துரைப்பாம்
    8

    அவையடக்கம்

    ஊர்கடலை இவனெனவந் துதித்தநான் ஓங்குதமிழ்
    நூற்கடலைக் கரைகண்டு நுவலநினைக் குமதுதிருப்
    பாற்கடலை சிற்றெரும்பு பருகநினைப் பதுபோலும்
    நீர்கடல்சூழ் மண்ணுலகை நிறுக்கநினைக் குமதொக்கும்
    9
    தேவுடனே கூடியசொல் செழுந்தமிழோர் தெரிந்துரைத்த
    பாவுடனே கூடியஎப் பருப்பொருளும் விழுப்பொருளாம்
    கோவுடனே கூடிவருங் குருட்டாவும் ஊர்புகுதும்
    பூவுடனே கூடியநார் புனிதர்முடிக் கணியாமால்
    10
    (*) இஃது உமாபதிசிவம் என்னும் புலவர் இயற்றியது என்பர்

நூல்

பாலாறு வளஞ்சுரந்து நல்க மல்கும் பாளைவிரி மணங்கமழ் பூஞ்சேநலை தோறும்
காலாறு கோலிஇசை பாடநீடும் களிமயில்நின் றாடும்இயல் தொண்டை நாட்டுள்
நாலாறுக் கோட்டத்துப் புலியூர்க் கோட்டம் நன்றிபுனை குன்றைவள நாட்டு மிக்க
சேலாறு கின்றவயற் குன்றத் துரில் சேக்கிழார் திருமரபு சிறந்த தன்றே
11

நாடெங்கும் சோழன்முனந் தெரிந்தே ஏற்றும் நற்குடி நாற்பத் தெண்ணாயிரத்து வந்த
கூடல்கிழான் புரிசைகிழான் குழவு சீர்வெண் குளப்பாக் கிழான் வரிசைக்குளத் துழான்முன்
தேடுபுக ழாரிவருஞ் சிறந்து வாழச் சேக்கிழார் குடியிலிந்த தேசம் உய்யப்
பாடல்புரி அருள்மொழித்தே வரும்பி னந்தம் பாலறா வாயரும்வந் துதித்து வாழ்ந்தார்
12

இமயமகள் யரையன்மகள் தழுவக் கச்சி ஏகம்பர் திருமேனி குழைந்த ஞான்று
சமயமவை ஆறினுக்குத் தலைவிக்கீசர் தந்தபடி எட்டுழக்கீராழி நெல்லும்
உமைதிருச் சூடகக்கையால் கொடுக்கவாங்கி உழவுதொழி லாற்பெருக்கி உலகமெல்லாம்
தமதுகொழு மிகுதிகொடு வளர்க்கும் வேளான் தலைவர் பெரும் புகழ்உலகில் தழைத்தன்றே
13
 
விளைகழனி பூலோகம் முழுதும் ஏரி விரிதிரை நீர்க்கடல் வருணன் கம்பு கட்டி
கிளர்கலப்பை தருசுமையாள் சுவேதராமன் கிடாமறலி வசத்தீசன் வசத்தான் என்றிங்
களவறிந்தாண் டாண்டுதொறும் விதைதப் பாமல் அளக்குமவள் கச்சியறம் வளர்த்த மாதா
ஒளிபொருகு கொழுமிகுதி எறும்பீ றானஉயி ரனைத்தும் தேவரும்உண் டுவப்பதன்றே
14

மாறுகொடு பழையனூர் நீலி செய்த வஞ்சனையால் வணிகன் உயிர் இழப்பத் தாங்கள்
கூறஉயசொல் பிழையாது துணிந்து செந்திக் குழியிலெழு பதுபேரும் முழ்கிக் கங்கை
ஆறணிசெஞ் சடைதிருவா லாங்காட் டப்பர் அண்டமுற நிமிந்தாடுமட அடியின்மின்கீழ்மெய்ப்
பேறுபெறும் வேளாளர் பெருமை எம்மால் பிரிந்தளவிட் டிவளவெனப் பேசலாமோ
15

காராளர் அணிவயலில் உழுதுதங்கள் கையார நட்டமுடி திருந்தில்இந்தப்
பாராளுந் திறல்அரசர் கவித்தவெற்றிப் பசும்பொன்மணி முடிதிருத்துங் கலப்பைபூண்ட
ஏரால்எண் டிசைவளர்க்கும் புகழ்வேளாளர் ஏறடிக்கஞ் சிறுகோலால் தரணியாளச்
சீராருமுடியரசர் இருந்துசெங்கோல் செலுத்துவர்வே ளாளர்புகழ் செப்பலாமோ
16

வாயிலார் சத்தியார் விறல்சேர் மிண்டர் வாக்கரையர் சாக்கியர்கோட் புலிகஞ் சாறர்
ஏயர்கோன் கலிக்காமர் முளைவித்தாக்கும் இளையான்தன் குடிமாறர் முர்க்கர் செங்கைத்
தாயனார் செருத்துணையார் செருவில் வெம்போர் சாதித்த முனையடுவார் ஆகநம்பி
பாயிரஞ்சேர் அறுபதுபேர் தனிப்பேர் தம்மில் பதின்மூவர் வேளாளர் பகருங்காலெ
17

அத்தகைய புகழ்வேளாண் மரபில்சேக் கிழார்குடியில் வந்தஅருண் மொழித்தேவர்க்குத்
தத்துபரி வலவனுந்தன் செங்கோலோச்சுங் தலைமையளித் தவர்தமக்கு தனதுபேரும்
ஊத்தமசோ ழப்பல்ல வன்தான்என்றும் உயர்பட்டங் கொடுத்திடஆங் கவர்நீர்நாட்டு
நித்தனுறை திருநாகேச் சுரத்தில்அன்பு நிறைதலினால் மறவாத நிலைமை மிக்கார்
18

தம்பதிகுன் றத்தூரில் மடவளாகந் தானாக்கி திருக்கோயில் தாபித்தங்கண்
செம்பியர்கோன் திருநாகேச் சுரம்போலீதுங் திருநாகேச் சுரமெனவே திருப்பேர் சாற்றி
அம்புவியில் அங்காங்க வைபவங்கட் கானபரி கலந்திருநாள் பூசைகற்பித்(து)
இம்பர்புகழ் வளவன்அர சுரிமைச்செங்கோல் இமசேது பரியந்தம் இயற்று நாளில்
19
 
கலகமிடும் அமண்முருட்டுக் கையர் பொய்யே கட்டிநடத் தியசிந்தா மணியை மெய்யென்(று)
உலகிலுள்ளொர் சிலகற்று நெற்குத்துண்ணா துமிக்குத்திக் கைவருந்திக் கறவைநிற்க
மலடுகறந் துளந்தளர்ந்து குளிர்பூஞ்சேலை வழியிருக்க குழிவீழ்ந் தளறுபாய்ந்து
விலைதருமென் கரும்பிருக்க இரும்மைமென்று விளக்கிருக்க மின்மினித் தீக்காய்ந்து நொந்தார்
20
 
வளவனுங்குண் டமண்புரட்டுத் திருட்டுச்சிந் தாமணிக் கதையை மெய்யென்று வரிசைகூர
உளமகிகழ்ந்து பலபடப்பா ராட்டிக்கேட்க உபயகுல மணிவிளக்காஞ்சேக் கிழான்கண்(டு)
இளஅரசன் தனைநோக்கிச் சமணர்பொய்ந்நூல் இதுமறுநக்காகா(து) இம்மைக்கு மற்றே
வளமருவு கின்றசிவ கதை இம்மைக்கும் மறுமைக்கும் உறுதிஎன வளவன்கேட்டு
21

"அவகதையாய்ப் பயனற்ற கதையீதாகில் அம்மையும் இம்மையும் உறுதி பயத்தக்க
சிவகதைஏ ததுகற்ற திறமைப்பேரார் சீவகசிந்தா மணிபோல் இடையில்வந்த
நவகதையோ? புராதனமோ? முன்னிலுண்டோ ? நானிலத்து சொன்னவரார்? கேட்பாரார்?
தவகதையொ? தவம்பண்ணிப் பேறுபெற்ற தனிக்கதையோ? அடைவுபடச் சாற்று"மென்றான்
22

செம்பியர்பூ பதிமகிழ்ந்து வினவிக்கேட்கச் சேக்கிழார் குரிசில்உரைசெய்வார் ஞாலத்(து)
அம்பலவர் திருத்தொண்டர் பெருமை ஆரூர் அடிகள்முதல் அடிஎடுத்துக் கொடுக்க நாவல்
நம்பிபதி னொருதிருப்பாட் டாகச்செய்த நலமலிதொண் டத்தொகைக்கு நாரையூரில்
தும்பிமுகன் பொருளுரைக்க நம்பியாண்டார் சுருதிமொழிக் கலித்துறைஅந் தாதிசெய்தார்
23

"ஆயுமறை மொழிநம்பி யாண்டார் நம்பி அருள்செய்த கலித்துறைஅந் தாதிதன்னைச்
சேயதிரு முறைகண்ட ராசராச தேவர்சிவா லயதேவர் முதலாயுள்ள
ஏயகருங் கடல்புடைசூழ் உலகமெலாம் எடுத்தினிது பாராட்டிற்(று)" என்ன
தூயகதை அடைவுபடச் சொல்வீர் என்றுசோழன் உரைசெயக் கேட்டு
24

தில்லைவாழ் அந்தணரே முதற்பண் பாடுதிருநீலகண்டத்துப் பாணார் ஈறாச்
சொல்லிய தொண்டத் தொகை நூல்வகை அந்தாதித் தொடர்ச்சியினை விரித்துரைக்க வளவன்கேட்டு
மெல்லியலாள் பங்கர் திருவருளை நோக்கி வியந்தடியார்(1) தொண்டுசெய்து பேறுபெற்ற
செல்கதியை நினைந்துருகி வளவர் கோமான் சேவையர்கா வலரைமுக நோக்கிச் சொல்வான்
/ (1)பா.பே. 'வியந்தடிமைத்'
25

"அவரவர்கள் நாடவர்கள் இருந்தஊர் வந்(து) அவதரித்த திருமரபு திருப்பேர் செய்த
சிவசமயத் திருத்தொண்டு முற்பிற்பாடு சிவனடிக்கிழ் உயர்பரம முத்தி பெற்றோர்
எவரும்அறியச் சீவன் முத்தராய் இங்கிருப்பவர்கள் இனிமேலும் பிறப்போர் மண்மேல்
அவர்களைச்சேர்ந் தருள்பெற்றொர் பகைத்துப்பெற்றோர் அவர்கள்பகையால் நரகில் அடைந்த பேர்கள்
26

இல்லறத்தில் இருந்துநனி முத்திபெற்றோர் சிற்றின்ப இயல்பைநீக்கி
நல்லறமாந் துறவறத்தில் நின்று பெற்றோர் நற்பிரமசாரிகளாய் அருள்பெற்றுயந்தோர்
செல்கதிசற் குருவருளால் சென்று சேர்ந்தோர் சிவபூசைசெய்துபர முத்தி பெற்றோர்
புல்லறிவு தவிர்ந்துதிரு வேடமேமெய்ப் பொருளெனக்கொண் டரனடிக்கீழ்ப் பொருந்த புக்கோர்
27

இப்படியே அடைவுபெற பிரித்துக்கேட்டால் யாவருக்கு மேதரிக்கச் செவிநா நீட்டா
ஓப்பரிய பொருள் தெரிந்து விளங்கித்தோன்ற உவமையடைத்தாய கதை கற்கநிற்கத்
தப்பில்பொருங் காவியமாய் விரித்துச் செய்து தருவீர்"என் றவர்குவிடைகொடுத்து வேண்டும்
செப்பரிய திரவியமும் கொடுக்க வாங்கிச் சேக்கிழார் குரிசில் திருத்தில்லை சேர்ந்தார்
28

தில்லை எல்லையில் வந்து வந்தெதிர் தெண்டனாக விழுந்தெழுந்(து)
அல்லிசேர் கமலத்தடத்தினில் மூழ்கி அம்பலவாணர்முன்
ஓல்லைசென்று பணிந்து கைத்தலம் உச்சிவைத்துளம் உருகி நைந்(து)
எல்லைகா ணரிதாய பெரொளி இன்பவாரியில் மூழ்கியே
29

அடையலார் புரம் நீறெழ திருநகை செய்தன்றொரு மூவரைப்
படியின் மேல் அடிமைக் கொளும் பதபங்கயங்கள் பணிந்து நின்(று)
அடிகளே உனதடியார் சீரடியேன் உரைத்திட அடிஎடுத்(து)
இடர்கெட தருவாய் எனத்திருவருளை எண்ணி இறைஞ்சினார்
30

அலைபுனற் பகிரதி நதிச்சடை யாட வாடர வாட நின்(று)
இலகு மன்றினில் ஆடுவார் திருவருளினால் அசரீரி வாக்கு
உலகெலாம் என அடிஎடுத்துரைசெய்த பேரொலி யோசைமிக்
கிலகு சீரடியார் செவிப்புலந்தெங்குமாகி நிறைந்தலால்
31

தில்லை மாநகர்வாழ வாழ்தவசிந்தை அந்தணர் ஆறைஞ்ஞூ(று)
அல்லதும் பலமடபதித்தவராச ரிக்கையிலுள்ள பேர்
எல்லை யில்லவர் யாவருங் களிகொளவிளங்(கு) அசரீரி வாக்கு
ஒல்லை வந்தெழ அனவருங் கரம் உச்சிவைத்து உளம் உருகினார்
32

உள்ளலார் புரம் நீரெழக் கணை ஒன்று தொட்டு உயர் மன்றில்வாழ்
வள்ளலார் திருமாலையுந் திருநீறு மெய்ப் பரிவட்டமும்
எள்ளலா ரலரென்று சேவையர் காவலர்க்கிவை இனிதளித்(து)
அள்ளலார்வயல் நீடுதில்லையில் அனைவருங் களிகொண்டபின்
33

சேவை காவலர் தொண்டர் சீர்உரை செய்தவற்குயர் செய்யுள்முன்
மூவரோதிய திருநெறித்தமிழ் ஆதலால் வரன்முறையால்
யாவரும் புகழ் திருநெறித் தலைவரை வணங்கி இணங்கி மெய்த்
தாவருஞ் சிவசாதனங்கள் தரித்து நீறுபரித்தரோ
34

வந்துசூழ நிரைத்த ஐயிருநூறுகால் மணிமண்டபத்(து)
எந்தையார் திருவருளை உன்னிஇருந்து சேவையர் காவலர்
செந்தமிழ் தொடையால் விளங்கிய திருவிருத்த நிருத்தனார்
தந்த சொன்முதலா எடுத்தனர் தாணுவான புராணநூல்
35

திருமறையோர் புராணமவை பதின்மூன்று சிவவேதியர் அரனை வழிபட்ட புராணமோ ரிரண்டு
குரைகழல் மாத்திரரொன்(று) அறுவர் முடிமன்னர் முறுநிலமன்னர் ஐவர் வணிகர்குலத்தைவர்
இருமை நெறி வேளாளர் பதின்மூவர் இடையர் இருவர் சாலியர் குயவர் தயிலவினையாளர்
பரதவர்கள் சான்றார் வண்ணார் சிலைமறவர் நீசர் பாணர் இவர் ஓர்ஒருவராம் பகருங்காலே
36

அறுதிபெறத் திருமரபு குறித்துரையாப் புராணம் அவைகள் ஒரு பதின்மூன்று திருக்கூட்டந்தன்னில்
மறுவிலவர் பதியறிந்த கதையிரண்டு வந்த மரபறிந்த கதையிரண்டு பேரறிந்த கதைஒன்(று)
உறுமரபு தெரியாப் புராணமவை யோரேழ் ஊர்அறியாக் கதை ஏழு பேரறியாக் கதைஎட்(டு)
இறுதி யிலக்கங்கண்ட திருக்கூட்ட மொன்றெண்ணித்தனை என்றறியாக் திருக்கூட்டம் எட்டே
37

தில்லை மறையோர் கலயர் முருகர் பசுபதியார் சிறப்புலியார் கணநாதர் பூசலை சண்டேசர்
கல்விநிறை சோமாசிமாறர் நமிநந்தி கவுணியனார் அப்பூதி நீலநக்கராகச்
செல்வமறையோர் காதை பதின்முன்று சிவவேதியர் காதை இரண்டு புகழ்த்துணையார் முப்போதும்
வல்லபடி சிவனை அருச்சிப்பார்கள் மாமாத்திரர் மரபில் சிறுத்தொண்டர் ஒருவர் முடிமன்னர்
38

அறுவரெவரவர் கோச்செங்கோட்சோழர் புகழ்ச்சோழர் அருள்மானி இடங்கழியார் நெடுமாறர் சேரர்
குறுநில மன்னவர் ஐவர் நரசிங்கமுனையர் குற்றுவனார் கழற்சிங்கர் மெய்பொருள் ஐயடிகள்
முறைமையில் வணிகரில் ஐவர் காரைக்காலம்மை மூர்த்தி கலிக்கம்பர் அமர்நீதி இயற்பகையார்
திறமைவிரி(2) வேளாளர் பதின் முவர் மூர்க்கர் செருத்துணையார் வாயிலார் கோடபூலியார் சத்தி
/ பா.பே.'திறமைபுரி'(2) /
39

தாயனார் இளையான்தன் குடிமாறர் அரசு சாக்கியர் கஞ்சாறர் விறல்மிண்டர் முனையடுவார்
ஏயர்கோன் கலிக்காமர் கோபாலர் மரபிலிருவர் திருமுலர் ஆனாயர் குயவர்
சேயபுகழ்த் திருநீலகண்டனார் பாணர் திருமரபில் திருநீலகண்டத்துப்பாணர்
மேயதிறல் அதிபத்தர் பரதவர் கண்ணப்பர் வேடர் மரபினில் சான்றார்(3) ஏனாதிநாதர்
/ பா.பே.'சான்றோர்'(3) /
40

நேசனார் சாலியரில் திருநாளைப்போவார் நீசர் மரபினில் எங்கள் திருக்குறிப்புத்தொண்டர்
துசொலிக்கும் ஏகாலிமரபு திலதைலத்தொழில் மரபில் கலியனார் மரபு குறித்துரையாக்(4)
காசில்கதை பதின்மூன்று குலச்சிறையார் தண்டி கணம்புல்லர் எறிபத்தர் காரியார் குறும்பர்
தேசுடைய பத்தர் பரமனையே பாடுவார்கள் சித்தத்தைச் சிவன்பால் வைத்தார் ஆரூர் பிறந்தார்
/ பா.பே.'குறித்தறி'(4) /
41

செப்பரிய பொய்யடிமை இல்லாதார் மெய்யில் திருநீறு பூசுமுனிவர்கள் யுலகுதன்னில்
அப்பாலும் அடிசார்ந்தார் இவரில் தமிற் சிலபேர் ஆய்ந்த தமிழ் பேர் சிலபேர் மலையாளர் சிலபேர்
தப்பாத தெலுங்கர் சிலர் மற்றுள தேசத்தோர் தவஞ்செய்து பரகதியை அடைந்தவர்கள் சிலபேர்
இப்போதும் இருந்தரனை வழிபடுவோர் சிலபேர் இனிமேலுந் திருமேனி கொடுவருவோர் சிலரே
42

திருஞானசம்பந்தர் திருநாவுக்கரையர் திருமூலர் நெடுமாறர் மங்கையர்க்கரசி
கரைசேருங் குலச்சிறையார் யாழ்ப்பாணர் குறும்பர் கணநாதர் அப்பூதி சோமாசிமாறர்
உரைசேரும் இவர்கள் பதினெருவர் குருவருளால் உயர்முத்தி யடைந்தவர்கள் எறிபபத்தர் கலயர்
முருகனார் கண்ணப்பர் ஆனாயர் தாயர் முர்த்தியார் சண்டேசர் திருநாளைப்போவார்
43

சேரனார் சாக்கியர் கூற்றுவனார் தண்டி சிறப்புலியார் பசுபதியார் கலிக்காமர் கலியர்
காரியார் அதிபத்தர் நீலநக்கர் பூசல் கணம்புல்லர் கோட்புலியர் நமிந்தியடிகள்
சீருடைய கழற்சிங்கர் வாயிலார் தூய செருத்துணையார் புகழ்துணையார் காடவர் ஐயடிகள்
மூரிநெடு வேற் செங்கோட்சோழனாராக முப்பதுபேர் சிவலிங்கத்தால் முத்தியடைந்தார்
44

திருநீலகண்டனார் இயற்பகையார் மூர்க்கர் சிறுத்தொண்டர் திருக்குறிப்புத்தோண்டர் விறல்மிண்டர்
அருள்சேரும் இடங்கழியார் முனையடுவார் சத்தி அமர்நீதி மெய்ப்பொருளார் ஏனாதி நாதர்
கரைசேரும் புகழ்ச்சோழர் கஞ்சாறர் மாறர் காரைக்காலம்மை நரசிங்கர் கலிக்கம்பர்
வருநேசராக ஒருபத்தொன்பதடியார் மணிவேடத்தாரை வழிபட்டரனை யடைந்தார்
45

கவுணியர் நாவுக்கரசர் பேயார் இம்மூவர் கற்கும் இயல் இசைவல்லோர் இசைத்தமிழ் நூல்வல்லோர்
பவமணுகாத் திருநாளைப்போவார் ஆனாயர் பாணர் பரமனையே பாடுவராக நால்வர்
புவனி புகழ் ஐயடிகள் திருமூலர் காரி பொய்யடிமை இல்லாத தமிழ்ப்புலவர் சேரர்
நவமுடைய இவர்ஐவர் இயல் வல்லோர் நின்ற நாயன்மார் தவம் புரிந்து நற்கதியை யடைந்தோர்
46

இல்லறத்தில் நின்றவர்கள் திருநீலகண்டர் இயற்பகை உள்ளிட்டார் முர்த்தியார் அப்பர்
நல்ல துறவறம் பிரமசாரிகள் சண்டேசர் நானிலத்தில் அரனடியார் தங்களுடன்சேர்ந்
செல்கதி பெற்றவர் ஞான சம்பந்தருடனே திருமணத்தில் ஒருமணமாய்ச் சேர்ந்தவர்கள் அனேகம்
பல்வளஞ்சேர் ஆரூரருடன் சேரர் கையில் பரிஉகைக்க உடன்சென்ற பரிசனமெண்ணிறந்தோர்
47

சிவனடியாருடன் பகையாய் முத்தியடைந்தவர்கள் சேய்ஞலூர் சண்டேசர் பிதா எச்சதத்தன்
கவர்புகழ்சேர் கோட்புலியார் உரைத்த திருவிரையாக் கலிபிழைத்த கிளைபகைத்து(5) நரகினைசென்றடைந்தோர்
தவரான(6) முர்த்தியார் இறைவனுக்குச்சாத்துஞ் சந்தணக்காப்பினை விலக்கி அமண்சமயச் சார்வாய்ப்
புவிபரந்த கருநடமன்னவன் முதலனேகர் புராணகதை யினைப் பிரித்துப் புகல எளிதலவே
/பா.பே. 'பிழைத்து'(5) . 'தவராசர்'(6)/
48

ஆருரர் திருத்தொண்டத் தொகையு஡ரத்த நாளில் அடுத்தொண்டுசெய்தொண்டர் சிலர் அவர்க்கு முன்னே
பேருர் மெய்த் தொண்டுசெய்த பேர் சிலபேர் அவர்க்குப்பிறக திரத்தொண்டுசெய்யும்பேர் சிலபேராகச்
சீருருந் திருத்தொண்டர் புராணத்திற் சேர்த்து சேவையர் கோன் சேர்வைசெயுந் தொண்டர் அளவிரந்தோர்
காரூரும் மணிகண்டர்க் கவரவர்கள் செய்த கைத்தொண்டில்ன் நிலைகரைகண்டுரைக்க எளிதலவே
49

ஓருலகோ ஒருதிசையோ ஒருபதியோ தம்மிலோரு மரபோ ஒருபெயரோ ஒரகாலந்தானோ
பேருலகில் ஒருமைநெறி தருங்கதையோ பன்மைப் பெருங்கதையோ பேர் ஒன்றோ அல்லவே இதனை
ஏர் உலகெலாம் உணர்ந் தோதர்றகரியவன் என்றிறைவன்முன் அடியெடுத்துக் கொடுத்தருளக் கொண்டு
பாருலகில் நாமகள் நின்றெடுத்துக் கைநீட்டப் பாடி முடித்தனர் தொண்டர்சீர் பரவவல்லார்
50

கரங்கடலைக் கைநீத்துக் கொள எளிது முந்நீர்க் கடற்கரையின்(7) நொய்மணலை எண்ணி அளவிடலாம்
பெருங்கடல்மேல் வருந்திரையை ஒன்றிரண்டென் றெண்ணிப் பிரித்தெழுதி கடையிலக்கம் பிரித்துவிடலாகும்
தருங்கலின் மீனை அளவிடலாகும் வானத்தாரகையைஅளவிடலாம் சங்கரன்தாள் தமது
சிரங்கொள் திருத்தொண்டர் புராணத்தை அளவிட நஞ்சேக்கிழார்க் கெளிதலதுதேவர்க்கும் அரிதே
/பா.பே. 'கடற்கரைநுண்'(7)/
51

அறுவதுபேர் தனித்திருப்பேர் கூட்டம் ஒன்பதாக அரனடியார் கதையை
மறுவில் திருநாவலூர்ச் சிவமறையோர் குலத்து வருசடையனார் மனைவி இசைஞானி வயிற்றில்
உறுதிபெற அவதரித்த ஆரூரர் முன்னாள் உரைசெய்த திருத்தொண்டத்தொகைப் பதிகத்தடைவே
நறைமலிபூம் பொழில்புடைசூழ் திருநாரையூரில் நம்பியாண்டார் திருவந்தாதியைக் கடைபிடித்து
52

காண்டம் இரண்டா வகுத்துத் கதைபரப்பைத் தொகுத்து கருதரிய சருக்கங்கள் பதின்மூன்றா நிலையிட்(டு)
ஈண்டுரைத்த புராணத்தில் திருவிருத்தம் நாலாயிரத் திருநூற்ஐம்பத்து மூன்றாக அமைத்துச்
சேண்டகையை திருத்தொண்டர் புராணமெனப் புராணத் திருமுறைக்குத் திருநாமஞ் சீர்மைபெற அமைத்திட்
டாண்டகைமை பெறயெழுதி மைக்காப்புச்சாத்தி அழகுபெறக் கவளிகையும் அமைத்ததில் வைத்ததனபின்
53

"சேவைகாவலர் புராணகதைதொகை செயநினைந்தெமை அகன்றபின்
யாவர் தாம் அருகிருந்த பேர்கள்கதைசென்ற தெவ்வளவிருந்தாங்(கு)
ஆவதென்னி வைகள் அறியவேண்டுமதறிந்து வாரும்" எனவளவர்கோன்
ஏவினார் உரிய தூதர் தூதறியாமல் ஒற்றரையு மேவினான்
54

வென்றி வேல்வளவன் அளவறிந்துவர விட்ட காளையர் "புராணநூல்
ஒன்று பாதிகதை சென்ற(து)" என்று சிலர் ஓடினார் சிலர் உவந்து சென்(று)
"இன்று நாளைமுடியும் புராணம் இனி" என்றுரைத்திட்டு இறைஞ்சினான்
சென்று "நற்கதைமுடிந்தது" என்று சிலர் செம்பியற்குறுதி செப்பினார்
55

வந்து சொன்னவர்கள் அனைவருக்கும் நவமணிகளுந்துகிலும் பொனும்
சிந்தி அள்ளியும் உவந்து விசி உயர் செம்பொன் அம்பல மருங்கில்வாழ்
அந்தி வண்ணர் நடமும் பணிந்து முதலடி எடுத்தவர் கொடுத்திடப்
புந்தி செய்து மகிழ்சேவை காவலர் "புராணமுந் தொழுவன்நான்" எனா
56

வீதிவீதிகள்தொறுந் தொறும் பயணம் என்று வென்றி மணிமுரசறைந்
தோதி வேதியர்கள் எண்ணி இட்ட உயர்நாளும் ஓரையும் முகூர்த்தமும்
போத நாடிவரை புரைகடக்களிறு பரவி தேர் கருவியாள்தரச்
சாதுரங்கமுடனே செலப் பிளிறுநந்தி மேல்கொடு நடந்தனன்
57

தேர்முழக்கொலி மழைக் கடக்கரட சிந்துரக் களிறு பிளிறுசீர்
ஆர்முழக்கொலி பரிசெருக்கொலி பதாதி வந்தெதிர் அடர்ந்தெழும்
போர் முழக்கொலி சழக்கிலாதுயர் படைக்கலன் புணரும் ஓசைஏழ்
கார்முழக்கொலியின் எட்டிரட்டிநிரை கடல்முழக்கென முழக்கெழ
58

வளவர்கோன் வரவறிந்த தில்லைமறையோரும் வண்஡ம மடபதிகளும்
பிளவுகொண்டமதி நுதல்மடந்தையாரும் மற்றுமுள பெரியோர்களும்
களவிலாத மொழிகொடு புராணகதை செய்த கங்கைகுல திலகரும்
தளவமாலை அபயனை எதிர்ந் தினியசாரஆசிபலசாற்றினார்
59

முண்டமான திருமுடியும் இட்ட திருமுண்டமங்கவசமுந்துணைக்
குண்டலங்களும் இரண்டுகாதினுங் வடிந்தலைந்த குழையுந்திருக்
கண்டமாலை கரமாலையுஞ் சிரசுகவின் விளங்வே
தோண்டர்சீர் பரவுவான் அணைந்த சுபசரிதை சோழனெதிர் கண்டனன்
60

கண்டபோதுள மகிழ்ந்து தன்னையறியாது கைகள் தலைமீதுறக்
'கொண்டவேடம் அரனடியார் வேடம் இது குறைவிலாத தவவேடம்' என்
றண்டவாணர் திருவருளை யுன்னி அவர்அடிமை கொண்ட பெருமை நினைந்(து)
எணடயங்கரசர் ஏறு சேவையர் குலாதி பாதுகை இறைஞ்சினான்
61

இறைஞ்சி அம்பலவர் பாத தாமரை இறைஞ்ச எண்ணி வரன்முறையால்
அறஞ்சிறந்த முனிசேவை காவலரும் ஆறைஞ்ஞூறு மறையோர்களும்
துறஞ்சிறந்த மடபதிகளுந்தொடர வந்து மன்னன் அரிபிரமர்பால்
மறைஞ்சு நின்ற பொருள் வெளிப்பட கனகமன்றில் நின்றபடி கண்டனன்
62

கண்டகண்அருவி தாரை கொள்ள இருகைகள் அஞ்சலிகொள �
கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார்
அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்
"சேக்கிழார் சுவாமிகள் புராணம்"
koRRavankuTi umApati civAcAriyAr's
cEkkizAr cuvAmikaL purANam

Acknowledgements: Etext preparation, proof reading & web version N D LogaSundaram & his daughter L Selvanayagi, Chennai India. PDF and unicode version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai 1999 - 2004 - Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website  http://www.projectmadurai.org/  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சிவசிவ
திருச்செந்திலாண்டவன் துணை

    பாயிரம்

    விநாயகர்

    வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்
    பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
    ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்
    ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்
    1

    சபாநாதர்

    சீராருஞ் சதுர்மறையும் தில்லைவா ழந்தணரும்
    பாராரும் புலிமுனியும் பதஞ்சலியும் தொழுதேத்த
    வாராருங் கடல்புடைசூழ் வையமெலாற் ஈடேற
    ஏராரு மணிமன்றுள் எடுத்ததிரு வடிபோற்றி
    2

    சிவகாமசுந்தரி

    பரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இருள்நீங்கச்
    சிரந்தழுவு சமயநெறித் திருநீற்றின் ஒளிவிளங்க
    அரந்தைகெட புகலியர்கோன் அமுதுசெயத் திருமுலைப்பால்
    சுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல்போற்றி
    3

    கற்பக விநாயகர்

    மலரயனுந் திருமாலுங் காணாமை மதிமயங்கப்
    புலிமுனியும் பதஞ்சலியுங் கண்டுதொழப் புரிசடையார்
    குலவுநடந் தருந்தில்லைக் குடதிசைக் கோபுரவாயில்
    நிலவியகற் பகக்கன்றின் நிரைமலர்த்தா ளிணைபோற்றி
    4

    சுப்ரமணியர்

    பாறுமுக மும்பொருந்தப் பருந்துவிருந் துணக்கழுகு
    நூறுமுக மாயணைந்து நூழில்படு களம்புகுத
    மாறுமுகந் தருநிருதர் மடியவடி வேலெடுத்த
    ஆறுமுகன் திருவடித்தா மறையிணைக ளவைபோற்றி
    5

    சைவ சமயாசாரியார்

    பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
    ஆழிமிசை கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
    வாழிதிரு நாவலுர் வன்றொண்டர் பதம்போற்றி
    ஊழிமலி திருவாத வூரர்திருத் தாள்போற்றி
    6

    திருத்தொண்டர் - சேக்கிழார்

    தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
    தொல்லையதாந் திருத்தொண்டத் தெகையடியார் பதம்போற்றி
    ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
    செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழார ரடிபோற்றி
    7

    நூற்பெயர்

    தாய்மலர்ந்த முகத்தினளாய்த் தழுவிமுலை தரவந்த
    நோய்மலர்ந்த பிறவிதொறு நுழையாமல் உலகுய்யத்
    தீமலர்ந்த சடைக்கூத்தர் திருவருளாற் சேக்கிழார்
    வாய்மலர்ந்த புராணத்தின் வரலாறு விரித்துரைப்பாம்
    8

    அவையடக்கம்

    ஊர்கடலை இவனெனவந் துதித்தநான் ஓங்குதமிழ்
    நூற்கடலைக் கரைகண்டு நுவலநினைக் குமதுதிருப்
    பாற்கடலை சிற்றெரும்பு பருகநினைப் பதுபோலும்
    நீர்கடல்சூழ் மண்ணுலகை நிறுக்கநினைக் குமதொக்கும்
    9
    தேவுடனே கூடியசொல் செழுந்தமிழோர் தெரிந்துரைத்த
    பாவுடனே கூடியஎப் பருப்பொருளும் விழுப்பொருளாம்
    கோவுடனே கூடிவருங் குருட்டாவும் ஊர்புகுதும்
    பூவுடனே கூடியநார் புனிதர்முடிக் கணியாமால்
    10
    (*) இஃது உமாபதிசிவம் என்னும் புலவர் இயற்றியது என்பர்

நூல்

பாலாறு வளஞ்சுரந்து நல்க மல்கும் பாளைவிரி மணங்கமழ் பூஞ்சேநலை தோறும்
காலாறு கோலிஇசை பாடநீடும் களிமயில்நின் றாடும்இயல் தொண்டை நாட்டுள்
நாலாறுக் கோட்டத்துப் புலியூர்க் கோட்டம் நன்றிபுனை குன்றைவள நாட்டு மிக்க
சேலாறு கின்றவயற் குன்றத் துரில் சேக்கிழார் திருமரபு சிறந்த தன்றே
11

நாடெங்கும் சோழன்முனந் தெரிந்தே ஏற்றும் நற்குடி நாற்பத் தெண்ணாயிரத்து வந்த
கூடல்கிழான் புரிசைகிழான் குழவு சீர்வெண் குளப்பாக் கிழான் வரிசைக்குளத் துழான்முன்
தேடுபுக ழாரிவருஞ் சிறந்து வாழச் சேக்கிழார் குடியிலிந்த தேசம் உய்யப்
பாடல்புரி அருள்மொழித்தே வரும்பி னந்தம் பாலறா வாயரும்வந் துதித்து வாழ்ந்தார்
12

இமயமகள் யரையன்மகள் தழுவக் கச்சி ஏகம்பர் திருமேனி குழைந்த ஞான்று
சமயமவை ஆறினுக்குத் தலைவிக்கீசர் தந்தபடி எட்டுழக்கீராழி நெல்லும்
உமைதிருச் சூடகக்கையால் கொடுக்கவாங்கி உழவுதொழி லாற்பெருக்கி உலகமெல்லாம்
தமதுகொழு மிகுதிகொடு வளர்க்கும் வேளான் தலைவர் பெரும் புகழ்உலகில் தழைத்தன்றே
13
 
விளைகழனி பூலோகம் முழுதும் ஏரி விரிதிரை நீர்க்கடல் வருணன் கம்பு கட்டி
கிளர்கலப்பை தருசுமையாள் சுவேதராமன் கிடாமறலி வசத்தீசன் வசத்தான் என்றிங்
களவறிந்தாண் டாண்டுதொறும் விதைதப் பாமல் அளக்குமவள் கச்சியறம் வளர்த்த மாதா
ஒளிபொருகு கொழுமிகுதி எறும்பீ றானஉயி ரனைத்தும் தேவரும்உண் டுவப்பதன்றே
14

மாறுகொடு பழையனூர் நீலி செய்த வஞ்சனையால் வணிகன் உயிர் இழப்பத் தாங்கள்
கூறஉயசொல் பிழையாது துணிந்து செந்திக் குழியிலெழு பதுபேரும் முழ்கிக் கங்கை
ஆறணிசெஞ் சடைதிருவா லாங்காட் டப்பர் அண்டமுற நிமிந்தாடுமட அடியின்மின்கீழ்மெய்ப்
பேறுபெறும் வேளாளர் பெருமை எம்மால் பிரிந்தளவிட் டிவளவெனப் பேசலாமோ
15

காராளர் அணிவயலில் உழுதுதங்கள் கையார நட்டமுடி திருந்தில்இந்தப்
பாராளுந் திறல்அரசர் கவித்தவெற்றிப் பசும்பொன்மணி முடிதிருத்துங் கலப்பைபூண்ட
ஏரால்எண் டிசைவளர்க்கும் புகழ்வேளாளர் ஏறடிக்கஞ் சிறுகோலால் தரணியாளச்
சீராருமுடியரசர் இருந்துசெங்கோல் செலுத்துவர்வே ளாளர்புகழ் செப்பலாமோ
16

வாயிலார் சத்தியார் விறல்சேர் மிண்டர் வாக்கரையர் சாக்கியர்கோட் புலிகஞ் சாறர்
ஏயர்கோன் கலிக்காமர் முளைவித்தாக்கும் இளையான்தன் குடிமாறர் முர்க்கர் செங்கைத்
தாயனார் செருத்துணையார் செருவில் வெம்போர் சாதித்த முனையடுவார் ஆகநம்பி
பாயிரஞ்சேர் அறுபதுபேர் தனிப்பேர் தம்மில் பதின்மூவர் வேளாளர் பகருங்காலெ
17

அத்தகைய புகழ்வேளாண் மரபில்சேக் கிழார்குடியில் வந்தஅருண் மொழித்தேவர்க்குத்
தத்துபரி வலவனுந்தன் செங்கோலோச்சுங் தலைமையளித் தவர்தமக்கு தனதுபேரும்
ஊத்தமசோ ழப்பல்ல வன்தான்என்றும் உயர்பட்டங் கொடுத்திடஆங் கவர்நீர்நாட்டு
நித்தனுறை திருநாகேச் சுரத்தில்அன்பு நிறைதலினால் மறவாத நிலைமை மிக்கார்
18

தம்பதிகுன் றத்தூரில் மடவளாகந் தானாக்கி திருக்கோயில் தாபித்தங்கண்
செம்பியர்கோன் திருநாகேச் சுரம்போலீதுங் திருநாகேச் சுரமெனவே திருப்பேர் சாற்றி
அம்புவியில் அங்காங்க வைபவங்கட் கானபரி கலந்திருநாள் பூசைகற்பித்(து)
இம்பர்புகழ் வளவன்அர சுரிமைச்செங்கோல் இமசேது பரியந்தம் இயற்று நாளில்
19
 
கலகமிடும் அமண்முருட்டுக் கையர் பொய்யே கட்டிநடத் தியசிந்தா மணியை மெய்யென்(று)
உலகிலுள்ளொர் சிலகற்று நெற்குத்துண்ணா துமிக்குத்திக் கைவருந்திக் கறவைநிற்க
மலடுகறந் துளந்தளர்ந்து குளிர்பூஞ்சேலை வழியிருக்க குழிவீழ்ந் தளறுபாய்ந்து
விலைதருமென் கரும்பிருக்க இரும்மைமென்று விளக்கிருக்க மின்மினித் தீக்காய்ந்து நொந்தார்
20
 
வளவனுங்குண் டமண்புரட்டுத் திருட்டுச்சிந் தாமணிக் கதையை மெய்யென்று வரிசைகூர
உளமகிகழ்ந்து பலபடப்பா ராட்டிக்கேட்க உபயகுல மணிவிளக்காஞ்சேக் கிழான்கண்(டு)
இளஅரசன் தனைநோக்கிச் சமணர்பொய்ந்நூல் இதுமறுநக்காகா(து) இம்மைக்கு மற்றே
வளமருவு கின்றசிவ கதை இம்மைக்கும் மறுமைக்கும் உறுதிஎன வளவன்கேட்டு
21

"அவகதையாய்ப் பயனற்ற கதையீதாகில் அம்மையும் இம்மையும் உறுதி பயத்தக்க
சிவகதைஏ ததுகற்ற திறமைப்பேரார் சீவகசிந்தா மணிபோல் இடையில்வந்த
நவகதையோ? புராதனமோ? முன்னிலுண்டோ ? நானிலத்து சொன்னவரார்? கேட்பாரார்?
தவகதையொ? தவம்பண்ணிப் பேறுபெற்ற தனிக்கதையோ? அடைவுபடச் சாற்று"மென்றான்
22

செம்பியர்பூ பதிமகிழ்ந்து வினவிக்கேட்கச் சேக்கிழார் குரிசில்உரைசெய்வார் ஞாலத்(து)
அம்பலவர் திருத்தொண்டர் பெருமை ஆரூர் அடிகள்முதல் அடிஎடுத்துக் கொடுக்க நாவல்
நம்பிபதி னொருதிருப்பாட் டாகச்செய்த நலமலிதொண் டத்தொகைக்கு நாரையூரில்
தும்பிமுகன் பொருளுரைக்க நம்பியாண்டார் சுருதிமொழிக் கலித்துறைஅந் தாதிசெய்தார்
23

"ஆயுமறை மொழிநம்பி யாண்டார் நம்பி அருள்செய்த கலித்துறைஅந் தாதிதன்னைச்
சேயதிரு முறைகண்ட ராசராச தேவர்சிவா லயதேவர் முதலாயுள்ள
ஏயகருங் கடல்புடைசூழ் உலகமெலாம் எடுத்தினிது பாராட்டிற்(று)" என்ன
தூயகதை அடைவுபடச் சொல்வீர் என்றுசோழன் உரைசெயக் கேட்டு
24

தில்லைவாழ் அந்தணரே முதற்பண் பாடுதிருநீலகண்டத்துப் பாணார் ஈறாச்
சொல்லிய தொண்டத் தொகை நூல்வகை அந்தாதித் தொடர்ச்சியினை விரித்துரைக்க வளவன்கேட்டு
மெல்லியலாள் பங்கர் திருவருளை நோக்கி வியந்தடியார்(1) தொண்டுசெய்து பேறுபெற்ற
செல்கதியை நினைந்துருகி வளவர் கோமான் சேவையர்கா வலரைமுக நோக்கிச் சொல்வான்
/ (1)பா.பே. 'வியந்தடிமைத்'
25

"அவரவர்கள் நாடவர்கள் இருந்தஊர் வந்(து) அவதரித்த திருமரபு திருப்பேர் செய்த
சிவசமயத் திருத்தொண்டு முற்பிற்பாடு சிவனடிக்கிழ் உயர்பரம முத்தி பெற்றோர்
எவரும்அறியச் சீவன் முத்தராய் இங்கிருப்பவர்கள் இனிமேலும் பிறப்போர் மண்மேல்
அவர்களைச்சேர்ந் தருள்பெற்றொர் பகைத்துப்பெற்றோர் அவர்கள்பகையால் நரகில் அடைந்த பேர்கள்
26

இல்லறத்தில் இருந்துநனி முத்திபெற்றோர் சிற்றின்ப இயல்பைநீக்கி
நல்லறமாந் துறவறத்தில் நின்று பெற்றோர் நற்பிரமசாரிகளாய் அருள்பெற்றுயந்தோர்
செல்கதிசற் குருவருளால் சென்று சேர்ந்தோர் சிவபூசைசெய்துபர முத்தி பெற்றோர்
புல்லறிவு தவிர்ந்துதிரு வேடமேமெய்ப் பொருளெனக்கொண் டரனடிக்கீழ்ப் பொருந்த புக்கோர்
27

இப்படியே அடைவுபெற பிரித்துக்கேட்டால் யாவருக்கு மேதரிக்கச் செவிநா நீட்டா
ஓப்பரிய பொருள் தெரிந்து விளங்கித்தோன்ற உவமையடைத்தாய கதை கற்கநிற்கத்
தப்பில்பொருங் காவியமாய் விரித்துச் செய்து தருவீர்"என் றவர்குவிடைகொடுத்து வேண்டும்
செப்பரிய திரவியமும் கொடுக்க வாங்கிச் சேக்கிழார் குரிசில் திருத்தில்லை சேர்ந்தார்
28

தில்லை எல்லையில் வந்து வந்தெதிர் தெண்டனாக விழுந்தெழுந்(து)
அல்லிசேர் கமலத்தடத்தினில் மூழ்கி அம்பலவாணர்முன்
ஓல்லைசென்று பணிந்து கைத்தலம் உச்சிவைத்துளம் உருகி நைந்(து)
எல்லைகா ணரிதாய பெரொளி இன்பவாரியில் மூழ்கியே
29

அடையலார் புரம் நீறெழ திருநகை செய்தன்றொரு மூவரைப்
படியின் மேல் அடிமைக் கொளும் பதபங்கயங்கள் பணிந்து நின்(று)
அடிகளே உனதடியார் சீரடியேன் உரைத்திட அடிஎடுத்(து)
இடர்கெட தருவாய் எனத்திருவருளை எண்ணி இறைஞ்சினார்
30

அலைபுனற் பகிரதி நதிச்சடை யாட வாடர வாட நின்(று)
இலகு மன்றினில் ஆடுவார் திருவருளினால் அசரீரி வாக்கு
உலகெலாம் என அடிஎடுத்துரைசெய்த பேரொலி யோசைமிக்
கிலகு சீரடியார் செவிப்புலந்தெங்குமாகி நிறைந்தலால்
31

தில்லை மாநகர்வாழ வாழ்தவசிந்தை அந்தணர் ஆறைஞ்ஞூ(று)
அல்லதும் பலமடபதித்தவராச ரிக்கையிலுள்ள பேர்
எல்லை யில்லவர் யாவருங் களிகொளவிளங்(கு) அசரீரி வாக்கு
ஒல்லை வந்தெழ அனவருங் கரம் உச்சிவைத்து உளம் உருகினார்
32

உள்ளலார் புரம் நீரெழக் கணை ஒன்று தொட்டு உயர் மன்றில்வாழ்
வள்ளலார் திருமாலையுந் திருநீறு மெய்ப் பரிவட்டமும்
எள்ளலா ரலரென்று சேவையர் காவலர்க்கிவை இனிதளித்(து)
அள்ளலார்வயல் நீடுதில்லையில் அனைவருங் களிகொண்டபின்
33

சேவை காவலர் தொண்டர் சீர்உரை செய்தவற்குயர் செய்யுள்முன்
மூவரோதிய திருநெறித்தமிழ் ஆதலால் வரன்முறையால்
யாவரும் புகழ் திருநெறித் தலைவரை வணங்கி இணங்கி மெய்த்
தாவருஞ் சிவசாதனங்கள் தரித்து நீறுபரித்தரோ
34

வந்துசூழ நிரைத்த ஐயிருநூறுகால் மணிமண்டபத்(து)
எந்தையார் திருவருளை உன்னிஇருந்து சேவையர் காவலர்
செந்தமிழ் தொடையால் விளங்கிய திருவிருத்த நிருத்தனார்
தந்த சொன்முதலா எடுத்தனர் தாணுவான புராணநூல்
35

திருமறையோர் புராணமவை பதின்மூன்று சிவவேதியர் அரனை வழிபட்ட புராணமோ ரிரண்டு
குரைகழல் மாத்திரரொன்(று) அறுவர் முடிமன்னர் முறுநிலமன்னர் ஐவர் வணிகர்குலத்தைவர்
இருமை நெறி வேளாளர் பதின்மூவர் இடையர் இருவர் சாலியர் குயவர் தயிலவினையாளர்
பரதவர்கள் சான்றார் வண்ணார் சிலைமறவர் நீசர் பாணர் இவர் ஓர்ஒருவராம் பகருங்காலே
36

அறுதிபெறத் திருமரபு குறித்துரையாப் புராணம் அவைகள் ஒரு பதின்மூன்று திருக்கூட்டந்தன்னில்
மறுவிலவர் பதியறிந்த கதையிரண்டு வந்த மரபறிந்த கதையிரண்டு பேரறிந்த கதைஒன்(று)
உறுமரபு தெரியாப் புராணமவை யோரேழ் ஊர்அறியாக் கதை ஏழு பேரறியாக் கதைஎட்(டு)
இறுதி யிலக்கங்கண்ட திருக்கூட்ட மொன்றெண்ணித்தனை என்றறியாக் திருக்கூட்டம் எட்டே
37

தில்லை மறையோர் கலயர் முருகர் பசுபதியார் சிறப்புலியார் கணநாதர் பூசலை சண்டேசர்
கல்விநிறை சோமாசிமாறர் நமிநந்தி கவுணியனார் அப்பூதி நீலநக்கராகச்
செல்வமறையோர் காதை பதின்முன்று சிவவேதியர் காதை இரண்டு புகழ்த்துணையார் முப்போதும்
வல்லபடி சிவனை அருச்சிப்பார்கள் மாமாத்திரர் மரபில் சிறுத்தொண்டர் ஒருவர் முடிமன்னர்
38

அறுவரெவரவர் கோச்செங்கோட்சோழர் புகழ்ச்சோழர் அருள்மானி இடங்கழியார் நெடுமாறர் சேரர்
குறுநில மன்னவர் ஐவர் நரசிங்கமுனையர் குற்றுவனார் கழற்சிங்கர் மெய்பொருள் ஐயடிகள்
முறைமையில் வணிகரில் ஐவர் காரைக்காலம்மை மூர்த்தி கலிக்கம்பர் அமர்நீதி இயற்பகையார்
திறமைவிரி(2) வேளாளர் பதின் முவர் மூர்க்கர் செருத்துணையார் வாயிலார் கோடபூலியார் சத்தி
/ பா.பே.'திறமைபுரி'(2) /
39

தாயனார் இளையான்தன் குடிமாறர் அரசு சாக்கியர் கஞ்சாறர் விறல்மிண்டர் முனையடுவார்
ஏயர்கோன் கலிக்காமர் கோபாலர் மரபிலிருவர் திருமுலர் ஆனாயர் குயவர்
சேயபுகழ்த் திருநீலகண்டனார் பாணர் திருமரபில் திருநீலகண்டத்துப்பாணர்
மேயதிறல் அதிபத்தர் பரதவர் கண்ணப்பர் வேடர் மரபினில் சான்றார்(3) ஏனாதிநாதர்
/ பா.பே.'சான்றோர்'(3) /
40

நேசனார் சாலியரில் திருநாளைப்போவார் நீசர் மரபினில் எங்கள் திருக்குறிப்புத்தொண்டர்
துசொலிக்கும் ஏகாலிமரபு திலதைலத்தொழில் மரபில் கலியனார் மரபு குறித்துரையாக்(4)
காசில்கதை பதின்மூன்று குலச்சிறையார் தண்டி கணம்புல்லர் எறிபத்தர் காரியார் குறும்பர்
தேசுடைய பத்தர் பரமனையே பாடுவார்கள் சித்தத்தைச் சிவன்பால் வைத்தார் ஆரூர் பிறந்தார்
/ பா.பே.'குறித்தறி'(4) /
41

செப்பரிய பொய்யடிமை இல்லாதார் மெய்யில் திருநீறு பூசுமுனிவர்கள் யுலகுதன்னில்
அப்பாலும் அடிசார்ந்தார் இவரில் தமிற் சிலபேர் ஆய்ந்த தமிழ் பேர் சிலபேர் மலையாளர் சிலபேர்
தப்பாத தெலுங்கர் சிலர் மற்றுள தேசத்தோர் தவஞ்செய்து பரகதியை அடைந்தவர்கள் சிலபேர்
இப்போதும் இருந்தரனை வழிபடுவோர் சிலபேர் இனிமேலுந் திருமேனி கொடுவருவோர் சிலரே
42

திருஞானசம்பந்தர் திருநாவுக்கரையர் திருமூலர் நெடுமாறர் மங்கையர்க்கரசி
கரைசேருங் குலச்சிறையார் யாழ்ப்பாணர் குறும்பர் கணநாதர் அப்பூதி சோமாசிமாறர்
உரைசேரும் இவர்கள் பதினெருவர் குருவருளால் உயர்முத்தி யடைந்தவர்கள் எறிபபத்தர் கலயர்
முருகனார் கண்ணப்பர் ஆனாயர் தாயர் முர்த்தியார் சண்டேசர் திருநாளைப்போவார்
43

சேரனார் சாக்கியர் கூற்றுவனார் தண்டி சிறப்புலியார் பசுபதியார் கலிக்காமர் கலியர்
காரியார் அதிபத்தர் நீலநக்கர் பூசல் கணம்புல்லர் கோட்புலியர் நமிந்தியடிகள்
சீருடைய கழற்சிங்கர் வாயிலார் தூய செருத்துணையார் புகழ்துணையார் காடவர் ஐயடிகள்
மூரிநெடு வேற் செங்கோட்சோழனாராக முப்பதுபேர் சிவலிங்கத்தால் முத்தியடைந்தார்
44

திருநீலகண்டனார் இயற்பகையார் மூர்க்கர் சிறுத்தொண்டர் திருக்குறிப்புத்தோண்டர் விறல்மிண்டர்
அருள்சேரும் இடங்கழியார் முனையடுவார் சத்தி அமர்நீதி மெய்ப்பொருளார் ஏனாதி நாதர்
கரைசேரும் புகழ்ச்சோழர் கஞ்சாறர் மாறர் காரைக்காலம்மை நரசிங்கர் கலிக்கம்பர்
வருநேசராக ஒருபத்தொன்பதடியார் மணிவேடத்தாரை வழிபட்டரனை யடைந்தார்
45

கவுணியர் நாவுக்கரசர் பேயார் இம்மூவர் கற்கும் இயல் இசைவல்லோர் இசைத்தமிழ் நூல்வல்லோர்
பவமணுகாத் திருநாளைப்போவார் ஆனாயர் பாணர் பரமனையே பாடுவராக நால்வர்
புவனி புகழ் ஐயடிகள் திருமூலர் காரி பொய்யடிமை இல்லாத தமிழ்ப்புலவர் சேரர்
நவமுடைய இவர்ஐவர் இயல் வல்லோர் நின்ற நாயன்மார் தவம் புரிந்து நற்கதியை யடைந்தோர்
46

இல்லறத்தில் நின்றவர்கள் திருநீலகண்டர் இயற்பகை உள்ளிட்டார் முர்த்தியார் அப்பர்
நல்ல துறவறம் பிரமசாரிகள் சண்டேசர் நானிலத்தில் அரனடியார் தங்களுடன்சேர்ந்
செல்கதி பெற்றவர் ஞான சம்பந்தருடனே திருமணத்தில் ஒருமணமாய்ச் சேர்ந்தவர்கள் அனேகம்
பல்வளஞ்சேர் ஆரூரருடன் சேரர் கையில் பரிஉகைக்க உடன்சென்ற பரிசனமெண்ணிறந்தோர்
47

சிவனடியாருடன் பகையாய் முத்தியடைந்தவர்கள் சேய்ஞலூர் சண்டேசர் பிதா எச்சதத்தன்
கவர்புகழ்சேர் கோட்புலியார் உரைத்த திருவிரையாக் கலிபிழைத்த கிளைபகைத்து(5) நரகினைசென்றடைந்தோர்
தவரான(6) முர்த்தியார் இறைவனுக்குச்சாத்துஞ் சந்தணக்காப்பினை விலக்கி அமண்சமயச் சார்வாய்ப்
புவிபரந்த கருநடமன்னவன் முதலனேகர் புராணகதை யினைப் பிரித்துப் புகல எளிதலவே
/பா.பே. 'பிழைத்து'(5) . 'தவராசர்'(6)/
48

ஆருரர் திருத்தொண்டத் தொகையு஡ரத்த நாளில் அடுத்தொண்டுசெய்தொண்டர் சிலர் அவர்க்கு முன்னே
பேருர் மெய்த் தொண்டுசெய்த பேர் சிலபேர் அவர்க்குப்பிறக திரத்தொண்டுசெய்யும்பேர் சிலபேராகச்
சீருருந் திருத்தொண்டர் புராணத்திற் சேர்த்து சேவையர் கோன் சேர்வைசெயுந் தொண்டர் அளவிரந்தோர்
காரூரும் மணிகண்டர்க் கவரவர்கள் செய்த கைத்தொண்டில்ன் நிலைகரைகண்டுரைக்க எளிதலவே
49

ஓருலகோ ஒருதிசையோ ஒருபதியோ தம்மிலோரு மரபோ ஒருபெயரோ ஒரகாலந்தானோ
பேருலகில் ஒருமைநெறி தருங்கதையோ பன்மைப் பெருங்கதையோ பேர் ஒன்றோ அல்லவே இதனை
ஏர் உலகெலாம் உணர்ந் தோதர்றகரியவன் என்றிறைவன்முன் அடியெடுத்துக் கொடுத்தருளக் கொண்டு
பாருலகில் நாமகள் நின்றெடுத்துக் கைநீட்டப் பாடி முடித்தனர் தொண்டர்சீர் பரவவல்லார்
50

கரங்கடலைக் கைநீத்துக் கொள எளிது முந்நீர்க் கடற்கரையின்(7) நொய்மணலை எண்ணி அளவிடலாம்
பெருங்கடல்மேல் வருந்திரையை ஒன்றிரண்டென் றெண்ணிப் பிரித்தெழுதி கடையிலக்கம் பிரித்துவிடலாகும்
தருங்கலின் மீனை அளவிடலாகும் வானத்தாரகையைஅளவிடலாம் சங்கரன்தாள் தமது
சிரங்கொள் திருத்தொண்டர் புராணத்தை அளவிட நஞ்சேக்கிழார்க் கெளிதலதுதேவர்க்கும் அரிதே
/பா.பே. 'கடற்கரைநுண்'(7)/
51

அறுவதுபேர் தனித்திருப்பேர் கூட்டம் ஒன்பதாக அரனடியார் கதையை
மறுவில் திருநாவலூர்ச் சிவமறையோர் குலத்து வருசடையனார் மனைவி இசைஞானி வயிற்றில்
உறுதிபெற அவதரித்த ஆரூரர் முன்னாள் உரைசெய்த திருத்தொண்டத்தொகைப் பதிகத்தடைவே
நறைமலிபூம் பொழில்புடைசூழ் திருநாரையூரில் நம்பியாண்டார் திருவந்தாதியைக் கடைபிடித்து
52

காண்டம் இரண்டா வகுத்துத் கதைபரப்பைத் தொகுத்து கருதரிய சருக்கங்கள் பதின்மூன்றா நிலையிட்(டு)
ஈண்டுரைத்த புராணத்தில் திருவிருத்தம் நாலாயிரத் திருநூற்ஐம்பத்து மூன்றாக அமைத்துச்
சேண்டகையை திருத்தொண்டர் புராணமெனப் புராணத் திருமுறைக்குத் திருநாமஞ் சீர்மைபெற அமைத்திட்
டாண்டகைமை பெறயெழுதி மைக்காப்புச்சாத்தி அழகுபெறக் கவளிகையும் அமைத்ததில் வைத்ததனபின்
53

"சேவைகாவலர் புராணகதைதொகை செயநினைந்தெமை அகன்றபின்
யாவர் தாம் அருகிருந்த பேர்கள்கதைசென்ற தெவ்வளவிருந்தாங்(கு)
ஆவதென்னி வைகள் அறியவேண்டுமதறிந்து வாரும்" எனவளவர்கோன்
ஏவினார் உரிய தூதர் தூதறியாமல் ஒற்றரையு மேவினான்
54

வென்றி வேல்வளவன் அளவறிந்துவர விட்ட காளையர் "புராணநூல்
ஒன்று பாதிகதை சென்ற(து)" என்று சிலர் ஓடினார் சிலர் உவந்து சென்(று)
"இன்று நாளைமுடியும் புராணம் இனி" என்றுரைத்திட்டு இறைஞ்சினான்
சென்று "நற்கதைமுடிந்தது" என்று சிலர் செம்பியற்குறுதி செப்பினார்
55

வந்து சொன்னவர்கள் அனைவருக்கும் நவமணிகளுந்துகிலும் பொனும்
சிந்தி அள்ளியும் உவந்து விசி உயர் செம்பொன் அம்பல மருங்கில்வாழ்
அந்தி வண்ணர் நடமும் பணிந்து முதலடி எடுத்தவர் கொடுத்திடப்
புந்தி செய்து மகிழ்சேவை காவலர் "புராணமுந் தொழுவன்நான்" எனா
56

வீதிவீதிகள்தொறுந் தொறும் பயணம் என்று வென்றி மணிமுரசறைந்
தோதி வேதியர்கள் எண்ணி இட்ட உயர்நாளும் ஓரையும் முகூர்த்தமும்
போத நாடிவரை புரைகடக்களிறு பரவி தேர் கருவியாள்தரச்
சாதுரங்கமுடனே செலப் பிளிறுநந்தி மேல்கொடு நடந்தனன்
57

தேர்முழக்கொலி மழைக் கடக்கரட சிந்துரக் களிறு பிளிறுசீர்
ஆர்முழக்கொலி பரிசெருக்கொலி பதாதி வந்தெதிர் அடர்ந்தெழும்
போர் முழக்கொலி சழக்கிலாதுயர் படைக்கலன் புணரும் ஓசைஏழ்
கார்முழக்கொலியின் எட்டிரட்டிநிரை கடல்முழக்கென முழக்கெழ
58

வளவர்கோன் வரவறிந்த தில்லைமறையோரும் வண்஡ம மடபதிகளும்
பிளவுகொண்டமதி நுதல்மடந்தையாரும் மற்றுமுள பெரியோர்களும்
களவிலாத மொழிகொடு புராணகதை செய்த கங்கைகுல திலகரும்
தளவமாலை அபயனை எதிர்ந் தினியசாரஆசிபலசாற்றினார்
59

முண்டமான திருமுடியும் இட்ட திருமுண்டமங்கவசமுந்துணைக்
குண்டலங்களும் இரண்டுகாதினுங் வடிந்தலைந்த குழையுந்திருக்
கண்டமாலை கரமாலையுஞ் சிரசுகவின் விளங்வே
தோண்டர்சீர் பரவுவான் அணைந்த சுபசரிதை சோழனெதிர் கண்டனன்
60

கண்டபோதுள மகிழ்ந்து தன்னையறியாது கைகள் தலைமீதுறக்
'கொண்டவேடம் அரனடியார் வேடம் இது குறைவிலாத தவவேடம்' என்
றண்டவாணர் திருவருளை யுன்னி அவர்அடிமை கொண்ட பெருமை நினைந்(து)
எணடயங்கரசர் ஏறு சேவையர் குலாதி பாதுகை இறைஞ்சினான்
61

இறைஞ்சி அம்பலவர் பாத தாமரை இறைஞ்ச எண்ணி வரன்முறையால்
அறஞ்சிறந்த முனிசேவை காவலரும் ஆறைஞ்ஞூறு மறையோர்களும்
துறஞ்சிறந்த மடபதிகளுந்தொடர வந்து மன்னன் அரிபிரமர்பால்
மறைஞ்சு நின்ற பொருள் வெளிப்பட கனகமன்றில் நின்றபடி கண்டனன்
62

கண்டகண்அருவி தாரை கொள்ள இருகைகள் அள்சலிகொள �
கொற்றவன்குடி உமாபதி சிவாசாரியார்
அருளிச்செய்த திருத்தொண்டர் புராண வரலாறு என்னும்
"சேக்கிழார் சுவாமிகள் புராணம்"
koRRavankuTi umApati civAcAriyAr's
cEkkizAr cuvAmikaL purANam

Acknowledgements: Etext preparation, proof reading & web version N D LogaSundaram & his daughter L Selvanayagi, Chennai India. PDF and unicode version: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland © Project Madurai 1999 - 2004 - Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website  http://www.projectmadurai.org/  You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சிவசிவ
திருச்செந்திலாண்டவன் துணை

    பாயிரம்

    விநாயகர்

    வானுலகும் மண்ணுலகும் வாழமறை வாழப்
    பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க
    ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்
    ஆனைமுக னைப்பரவி அஞ்சலிசெய் கிற்பாம்
    1

    சபாநாதர்

    சீராருஞ் சதுர்மறையும் தில்லைவா ழந்தணரும்
    பாராரும் புலிமுனியும் பதஞ்சலியும் தொழுதேத்த
    வாராருங் கடல்புடைசூழ் வையமெலாற் ஈடேற
    ஏராரு மணிமன்றுள் எடுத்ததிரு வடிபோற்றி
    2

    சிவகாமசுந்தரி

    பரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய இருள்நீங்கச்
    சிரந்தழுவு சமயநெறித் திருநீற்றின் ஒளிவிளங்க
    அரந்தைகெட புகலியர்கோன் அமுதுசெயத் திருமுலைப்பால்
    சுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல்போற்றி
    3

    கற்பக விநாயகர்

    மலரயனுந் திருமாலுங் காணாமை மதிமயங்கப்
    புலிமுனியும் பதஞ்சலியுங் கண்டுதொழப் புரிசடையார்
    குலவுநடந் தருந்தில்லைக் குடதிசைக் கோபுரவாயில்
    நிலவியகற் பகக்கன்றின் நிரைமலர்த்தா ளிணைபோற்றி
    4

    சுப்ரமணியர்

    பாறுமுக மும்பொருந்தப் பருந்துவிருந் துணக்கழுகு
    நூறுமுக மாயணைந்து நூழில்படு களம்புகுத
    மாறுமுகந் தருநிருதர் மடியவடி வேலெடுத்த
    ஆறுமுகன் திருவடித்தா மறையிணைக ளவைபோற்றி
    5

    சைவ சமயாசாரியார்

    பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி
    ஆழிமிசை கல்மிதப்பில் அணைந்தபிரான் அடிபோற்றி
    வாழிதிரு நாவலுர் வன்றொண்டர் பதம்போற்றி
    ஊழிமலி திருவாத வூரர்திருத் தாள்போற்றி
    6

    திருத்தொண்டர் - சேக்கிழார்

    தில்லைவாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
    தொல்லையதாந் திருத்தொண்டத் தெகையடியார் பதம்போற்றி
    ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்த
    செல்வமலி குன்றத்தூர்ச் சேக்கிழார ரடிபோற்றி
    7

    நூற்பெயர்

    தாய்மலர்ந்த முகத்தினளாய்த் தழுவிமுலை தரவந்த
    நோய்மலர்ந்த பிறவிதொறு நுழையாமல் உலகுய்யத்
    தீமலர்ந்த சடைக்கூத்தர் திருவருளாற் சேக்கிழார்
    வாய்மலர்ந்த புராணத்தின் வரலாறு விரித்துரைப்பாம்
    8

    அவையடக்கம்

    ஊர்கடலை இவனெனவந் துதித்தநான் ஓங்குதமிழ்
    நூற்கடலைக் கரைகண்டு நுவலநினைக் குமதுதிருப்
    பாற்கடலை சிற்றெரும்பு பருகநினைப் பதுபோலும்
    நீர்கடல்சூழ் மண்ணுலகை நிறுக்கநினைக் குமதொக்கும்
    9
    தேவுடனே கூடியசொல் செழுந்தமிழோர் தெரிந்துரைத்த
    பாவுடனே கூடியஎப் பருப்பொருளும் விழுப்பொருளாம்
    கோவுடனே கூடிவருங் குருட்டாவும் ஊர்புகுதும்
    பூவுடனே கூடியநார் புனிதர்முடிக் கணியாமால்
    10
    (*) இஃது உமாபதிசிவம் என்னும் புலவர் இயற்றியது என்பர்

நூல்

பாலாறு வளஞ்சுரந்து நல்க மல்கும் பாளைவிரி மணங்கமழ் பூஞ்சேநலை தோறும்
காலாறு கோலிஇசை பாடநீடும் களிமயில்நின் றாடும்இயல் தொண்டை நாட்டுள்
நாலாறுக் கோட்டத்துப் புலியூர்க் கோட்டம் நன்றிபுனை குன்றைவள நாட்டு மிக்க
சேலாறு கின்றவயற் குன்றத் துரில் சேக்கிழார் திருமரபு சிறந்த தன்றே
11

நாடெங்கும் சோழன்முனந் தெரிந்தே ஏற்றும் நற்குடி நாற்பத் தெண்ணாயிரத்து வந்த
கூடல்கிழான் புரிசைகிழான் குழவு சீர்வெண் குளப்பாக் கிழான் வரிசைக்குளத் துழான்முன்
தேடுபுக ழாரிவருஞ் சிறந்து வாழச் சேக்கிழார் குடியிலிந்த தேசம் உய்யப்
பாடல்புரி அருள்மொழித்தே வரும்பி னந்தம் பாலறா வாயரும்வந் துதித்து வாழ்ந்தார்
12

இமயமகள் யரையன்மகள் தழுவக் கச்சி ஏகம்பர் திருமேனி குழைந்த ஞான்று
சமயமவை ஆறினுக்குத் தலைவிக்கீசர் தந்தபடி எட்டுழக்கீராழி நெல்லும்
உமைதிருச் சூடகக்கையால் கொடுக்கவாங்கி உழவுதொழி லாற்பெருக்கி உலகமெல்லாம்
தமதுகொழு மிகுதிகொடு வளர்க்கும் வேளான் தலைவர் பெரும் புகழ்உலகில் தழைத்தன்றே
13
 
விளைகழனி பூலோகம் முழுதும் ஏரி விரிதிரை நீர்க்கடல் வருணன் கம்பு கட்டி
கிளர்கலப்பை தருசுமையாள் சுவேதராமன் கிடாமறலி வசத்தீசன் வசத்தான் என்றிங்
களவறிந்தாண் டாண்டுதொறும் விதைதப் பாமல் அளக்குமவள் கச்சியறம் வளர்த்த மாதா
ஒளிபொருகு கொழுமிகுதி எறும்பீ றானஉயி ரனைத்தும் தேவரும்உண் டுவப்பதன்றே
14

மாறுகொடு பழையனூர் நீலி செய்த வஞ்சனையால் வணிகன் உயிர் இழப்பத் தாங்கள்
கூறஉயசொல் பிழையாது துணிந்து செந்திக் குழியிலெழு பதுபேரும் முழ்கிக் கங்கை
ஆறணிசெஞ் சடைதிருவா லாங்காட் டப்பர் அண்டமுற நிமிந்தாடுமட அடியின்மின்கீழ்மெய்ப்
பேறுபெறும் வேளாளர் பெருமை எம்மால் பிரிந்தளவிட் டிவளவெனப் பேசலாமோ
15

காராளர் அணிவயலில் உழுதுதங்கள் கையார நட்டமுடி திருந்தில்இந்தப்
பாராளுந் திறல்அரசர் கவித்தவெற்றிப் பசும்பொன்மணி முடிதிருத்துங் கலப்பைபூண்ட
ஏரால்எண் டிசைவளர்க்கும் புகழ்வேளாளர் ஏறடிக்கஞ் சிறுகோலால் தரணியாளச்
சீராருமுடியரசர் இருந்துசெங்கோல் செலுத்துவர்வே ளாளர்புகழ் செப்பலாமோ
16

வாயிலார் சத்தியார் விறல்சேர் மிண்டர் வாக்கரையர் சாக்கியர்கோட் புலிகஞ் சாறர்
ஏயர்கோன் கலிக்காமர் முளைவித்தாக்கும் இளையான்தன் குடிமாறர் முர்க்கர் செங்கைத்
தாயனார் செருத்துணையார் செருவில் வெம்போர் சாதித்த முனையடுவார் ஆகநம்பி
பாயிரஞ்சேர் அறுபதுபேர் தனிப்பேர் தம்மில் பதின்மூவர் வேளாளர் பகருங்காலெ
17

அத்தகைய புகழ்வேளாண் மரபில்சேக் கிழார்குடியில் வந்தஅருண் மொழித்தேவர்க்குத்
தத்துபரி வலவனுந்தன் செங்கோலோச்சுங் தலைமையளித் தவர்தமக்கு தனதுபேரும்
ஊத்தமசோ ழப்பல்ல வன்தான்என்றும் உயர்பட்டங் கொடுத்திடஆங் கவர்நீர்நாட்டு
நித்தனுறை திருநாகேச் சுரத்தில்அன்பு நிறைதலினால் மறவாத நிலைமை மிக்கார்
18

தம்பதிகுன் றத்தூரில் மடவளாகந் தானாக்கி திருக்கோயில் தாபித்தங்கண்
செம்பியர்கோன் திருநாகேச் சுரம்போலீதுங் திருநாகேச் சுரமெனவே திருப்பேர் சாற்றி
அம்புவியில் அங்காங்க வைபவங்கட் கானபரி கலந்திருநாள் பூசைகற்பித்(து)
இம்பர்புகழ் வளவன்அர சுரிமைச்செங்கோல் இமசேது பரியந்தம் இயற்று நாளில்
19
 
கலகமிடும் அமண்முருட்டுக் கையர் பொய்யே கட்டிநடத் தியசிந்தா மணியை மெய்யென்(று)
உலகிலுள்ளொர் சிலகற்று நெற்குத்துண்ணா துமிக்குத்திக் கைவருந்திக் கறவைநிற்க
மலடுகறந் துளந்தளர்ந்து குளிர்பூஞ்சேலை வழியிருக்க குழிவீழ்ந் தளறுபாய்ந்து
விலைதருமென் கரும்பிருக்க இரும்மைமென்று விளக்கிருக்க மின்மினித் தீக்காய்ந்து நொந்தார்
20
 
வளவனுங்குண் டமண்புரட்டுத் திருட்டுச்சிந் தாமணிக் கதையை மெய்யென்று வரிசைகூர
உளமகிகழ்ந்து பலபடப்பா ராட்டிக்கேட்க உபயகுல மணிவிளக்காஞ்சேக் கிழான்கண்(டு)
இளஅரசன் தனைநோக்கிச் சமணர்பொய்ந்நூல் இதுமறுநக்காகா(து) இம்மைக்கு மற்றே
வளமருவு கின்றசிவ கதை இம்மைக்கும் மறுமைக்கும் உறுதிஎன வளவன்கேட்டு
21

"அவகதையாய்ப் பயனற்ற கதையீதாகில் அம்மையும் இம்மையும் உறுதி பயத்தக்க
சிவகதைஏ ததுகற்ற திறமைப்பேரார் சீவகசிந்தா மணிபோல் இடையில்வந்த
நவகதையோ? புராதனமோ? முன்னிலுண்டோ ? நானிலத்து சொன்னவரார்? கேட்பாரார்?
தவகதையொ? தவம்பண்ணிப் பேறுபெற்ற தனிக்கதையோ? அடைவுபடச் சாற்று"மென்றான்
22

செம்பியர்பூ பதிமகிழ்ந்து வினவிக்கேட்கச் சேக்கிழார் குரிசில்உரைசெய்வார் ஞாலத்(து)
அம்பலவர் திருத்தொண்டர் பெருமை ஆரூர் அடிகள்முதல் அடிஎடுத்துக் கொடுக்க நாவல்
நம்பிபதி னொருதிருப்பாட் டாகச்செய்த நலமலிதொண் டத்தொகைக்கு நாரையூரில்
தும்பிமுகன் பொருளுரைக்க நம்பியாண்டார் சுருதிமொழிக் கலித்துறைஅந் தாதிசெய்தார்
23

"ஆயுமறை மொழிநம்பி யாண்டார் நம்பி அருள்செய்த கலித்துறைஅந் தாதிதன்னைச்
சேயதிரு முறைகண்ட ராசராச தேவர்சிவா லயதேவர் முதலாயுள்ள
ஏயகருங் கடல்புடைசூழ் உலகமெலாம் எடுத்தினிது பாராட்டிற்(று)" என்ன
தூயகதை அடைவுபடச் சொல்வீர் என்றுசோழன் உரைசெயக் கேட்டு
24

தில்லைவாழ் அந்தணரே முதற்பண் பாடுதிருநீலகண்டத்துப் பாணார் ஈறாச்
சொல்லிய தொண்டத் தொகை நூல்வகை அந்தாதித் தொடர்ச்சியினை விரித்துரைக்க வளவன்கேட்டு
மெல்லியலாள் பங்கர் திருவருளை நோக்கி வியந்தடியார்(1) தொண்டுசெய்து பேறுபெற்ற
செல்கதியை நினைந்துருகி வளவர் கோமான் சேவையர்கா வலரைமுக நோக்கிச் சொல்வான்
/ (1)பா.பே. 'வியந்தடிமைத்'
25

"அவரவர்கள் நாடவர்கள் இருந்தஊர் வந்(து) அவதரித்த திருமரபு திருப்பேர் செய்த
சிவசமயத் திருத்தொண்டு முற்பிற்பாடு சிவனடிக்கிழ் உயர்பரம முத்தி பெற்றோர்
எவரும்அறியச் சீவன் முத்தராய் இங்கிருப்பவர்கள் இனிமேலும் பிறப்போர் மண்மேல்
அவர்களைச்சேர்ந் தருள்பெற்றொர் பகைத்துப்பெற்றோர் அவர்கள்பகையால் நரகில் அடைந்த பேர்கள்
26

இல்லறத்தில் இருந்துநனி முத்திபெற்றோர் சிற்றின்ப இயல்பைநீக்கி
நல்லறமாந் துறவறத்தில் நின்று பெற்றோர் நற்பிரமசாரிகளாய் அருள்பெற்றுயந்தோர்
செல்கதிசற் குருவருளால் சென்று சேர்ந்தோர் சிவபூசைசெய்துபர முத்தி பெற்றோர்
புல்லறிவு தவிர்ந்துதிரு வேடமேமெய்ப் பொருளெனக்கொண் டரனடிக்கீழ்ப் பொருந்த புக்கோர்
27

இப்படியே அடைவுபெற பிரித்துக்கேட்டால் யாவருக்கு மேதரிக்கச் செவிநா நீட்டா
ஓப்பரிய பொருள் தெரிந்து விளங்கித்தோன்ற உவமையடைத்தாய கதை கற்கநிற்கத்
தப்பில்பொருங் காவியமாய் விரித்துச் செய்து தருவீர்"என் றவர்குவிடைகொடுத்து வேண்டும்
செப்பரிய திரவியமும் கொடுக்க வாங்கிச் சேக்கிழார் குரிசில் திருத்தில்லை சேர்ந்தார்
28

தில்லை எல்லையில் வந்து வந்தெதிர் தெண்டனாக விழுந்தெழுந்(து)
அல்லிசேர் கமலத்தடத்தினில் மூழ்கி அம்பலவாணர்முன்
ஓல்லைசென்று பணிந்து கைத்தலம் உச்சிவைத்துளம் உருகி நைந்(து)
எல்லைகா ணரிதாய பெரொளி இன்பவாரியில் மூழ்கியே
29

அடையலார் புரம் நீறெழ திருநகை செய்தன்றொரு மூவரைப்
படியின் மேல் அடிமைக் கொளும் பதபங்கயங்கள் பணிந்து நின்(று)
அடிகளே உனதடியார் சீரடியேன் உரைத்திட அடிஎடுத்(து)
இடர்கெட தருவாய் எனத்திருவருளை எண்ணி இறைஞ்சினார்
30

அலைபுனற் பகிரதி நதிச்சடை யாட வாடர வாட நின்(று)
இலகு மன்றினில் ஆடுவார் திருவருளினால் அசரீரி வாக்கு
உலகெலாம் என அடிஎடுத்துரைசெய்த பேரொலி யோசைமிக்
கிலகு சீரடியார் செவிப்புலந்தெங்குமாகி நிறைந்தலால்
31

தில்லை மாநகர்வாழ வாழ்தவசிந்தை அந்தணர் ஆறைஞ்ஞூ(று)
அல்லதும் பலமடபதித்தவராச ரிக்கையிலுள்ள பேர்
எல்லை யில்லவர் யாவருங் களிகொளவிளங்(கு) அசரீரி வாக்கு
ஒல்லை வந்தெழ அனவருங் கரம் உச்சிவைத்து உளம் உருகினார்
32

உள்ளலார் புரம் நீரெழக் கணை ஒன்று தொட்டு உயர் மன்றில்வாழ்
வள்ளலார் திருமாலையுந் திருநீறு மெய்ப் பரிவட்டமும்
எள்ளலா ரலரென்று சேவையர் காவலர்க்கிவை இனிதளித்(து)
அள்ளலார்வயல் நீடுதில்லையில் அனைவருங் களிகொண்டபின்
33

சேவை காவலர் தொண்டர் சீர்உரை செய்தவற்குயர் செய்யுள்முன்
மூவரோதிய திருநெறித்தமிழ் ஆதலால் வரன்முறையால்
யாவரும் புகழ் திருநெறித் தலைவரை வணங்கி இணங்கி மெய்த்
தாவருஞ் சிவசாதனங்கள் தரித்து நீறுபரித்தரோ
34

வந்துசூழ நிரைத்த ஐயிருநூறுகால் மணிமண்டபத்(து)
எந்தையார் திருவருளை உன்னிஇருந்து சேவையர் காவலர்
செந்தமிழ் தொடையால் விளங்கிய திருவிருத்த நிருத்தனார்
தந்த சொன்முதலா எடுத்தனர் தாணுவான புராணநூல்
35

திருமறையோர் புராணமவை பதின்மூன்று சிவவேதியர் அரனை வழிபட்ட புராணமோ ரிரண்டு
குரைகழல் மாத்திரரொன்(று) அறுவர் முடிமன்னர் முறுநிலமன்னர் ஐவர் வணிகர்குலத்தைவர்
இருமை நெறி வேளாளர் பதின்மூவர் இடையர் இருவர் சாலியர் குயவர் தயிலவினையாளர்
பரதவர்கள் சான்றார் வண்ணார் சிலைமறவர் நீசர் பாணர் இவர் ஓர்ஒருவராம் பகருங்காலே
36

அறுதிபெறத் திருமரபு குறித்துரையாப் புராணம் அவைகள் ஒரு பதின்மூன்று திருக்கூட்டந்தன்னில்
மறுவிலவர் பதியறிந்த கதையிரண்டு வந்த மரபறிந்த கதையிரண்டு பேரறிந்த கதைஒன்(று)
உறுமரபு தெரியாப் புராணமவை யோரேழ் ஊர்அறியாக் கதை ஏழு பேரறியாக் கதைஎட்(டு)
இறுதி யிலக்கங்கண்ட திருக்கூட்ட மொன்றெண்ணித்தனை என்றறியாக் திருக்கூட்டம் எட்டே
37

தில்லை மறையோர் கலயர் முருகர் பசுபதியார் சிறப்புலியார் கணநாதர் பூசலை சண்டேசர்
கல்விநிறை சோமாசிமாறர் நமிநந்தி கவுணியனார் அப்பூதி நீலநக்கராகச்
செல்வமறையோர் காதை பதின்முன்று சிவவேதியர் காதை இரண்டு புகழ்த்துணையார் முப்போதும்
வல்லபடி சிவனை அருச்சிப்பார்கள் மாமாத்திரர் மரபில் சிறுத்தொண்டர் ஒருவர் முடிமன்னர்
38

அறுவரெவரவர் கோச்செங்கோட்சோழர் புகழ்ச்சோழர் அருள்மானி இடங்கழியார் நெடுமாறர் சேரர்
குறுநில மன்னவர் ஐவர் நரசிங்கமுனையர் குற்றுவனார் கழற்சிங்கர் மெய்பொருள் ஐயடிகள்
முறைமையில் வணிகரில் ஐவர் காரைக்காலம்மை மூர்த்தி கலிக்கம்பர் அமர்நீதி இயற்பகையார்
திறமைவிரி(2) வேளாளர் பதின் முவர் மூர்க்கர் செருத்துணையார் வாயிலார் கோடபூலியார் சத்தி
/ பா.பே.'திறமைபுரி'(2) /
39

தாயனார் இளையான்தன் குடிமாறர் அரசு சாக்கியர் கஞ்சாறர் விறல்மிண்டர் முனையடுவார்
ஏயர்கோன் கலிக்காமர் கோபாலர் மரபிலிருவர் திருமுலர் ஆனாயர் குயவர்
சேயபுகழ்த் திருநீலகண்டனார் பாணர் திருமரபில் திருநீலகண்டத்துப்பாணர்
மேயதிறல் அதிபத்தர் பரதவர் கண்ணப்பர் வேடர் மரபினில் சான்றார்(3) ஏனாதிநாதர்
/ பா.பே.'சான்றோர்'(3) /
40

நேசனார் சாலியரில் திருநாளைப்போவார் நீசர் மரபினில் எங்கள் திருக்குறிப்புத்தொண்டர்
துசொலிக்கும் ஏகாலிமரபு திலதைலத்தொழில் மரபில் கலியனார் மரபு குறித்துரையாக்(4)
காசில்கதை பதின்மூன்று குலச்சிறையார் தண்டி கணம்புல்லர் எறிபத்தர் காரியார் குறும்பர்
தேசுடைய பத்தர் பரமனையே பாடுவார்கள் சித்தத்தைச் சிவன்பால் வைத்தார் ஆரூர் பிறந்தார்
/ பா.பே.'குறித்தறி'(4) /
41

செப்பரிய பொய்யடிமை இல்லாதார் மெய்யில் திருநீறு பூசுமுனிவர்கள் யுலகுதன்னில்
அப்பாலும் அடிசார்ந்தார் இவரில் தமிற் சிலபேர் ஆய்ந்த தமிழ் பேர் சிலபேர் மலையாளர் சிலபேர்
தப்பாத தெலுங்கர் சிலர் மற்றுள தேசத்தோர் தவஞ்செய்து பரகதியை அடைந்தவர்கள் சிலபேர்
இப்போதும் இருந்தரனை வழிபடுவோர் சிலபேர் இனிமேலுந் திருமேனி கொடுவருவோர் சிலரே
42

திருஞானசம்பந்தர் திருநாவுக்கரையர் திருமூலர் நெடுமாறர் மங்கையர்க்கரசி
கரைசேருங் குலச்சிறையார் யாழ்ப்பாணர் குறும்பர் கணநாதர் அப்பூதி சோமாசிமாறர்
உரைசேரும் இவர்கள் பதினெருவர் குருவருளால் உயர்முத்தி யடைந்தவர்கள் எறிபபத்தர் கலயர்
முருகனார் கண்ணப்பர் ஆனாயர் தாயர் முர்த்தியார் சண்டேசர் திருநாளைப்போவார்
43

சேரனார் சாக்கியர் கூற்றுவனார் தண்டி சிறப்புலியார் பசுபதியார் கலிக்காமர் கலியர்
காரியார் அதிபத்தர் நீலநக்கர் பூசல் கணம்புல்லர் கோட்புலியர் நமிந்தியடிகள்
சீருடைய கழற்சிங்கர் வாயிலார் தூய செருத்துணையார் புகழ்துணையார் காடவர் ஐயடிகள்
மூரிநெடு வேற் செங்கோட்சோழனாராக முப்பதுபேர் சிவலிங்கத்தால் முத்தியடைந்தார்
44

திருநீலகண்டனார் இயற்பகையார் மூர்க்கர் சிறுத்தொண்டர் திருக்குறிப்புத்தோண்டர் விறல்மிண்டர்
அருள்சேரும் இடங்கழியார் முனையடுவார் சத்தி அமர்நீதி மெய்ப்பொருளார் ஏனாதி நாதர்
கரைசேரும் புகழ்ச்சோழர் கஞ்சாறர் மாறர் காரைக்காலம்மை நரசிங்கர் கலிக்கம்பர்
வருநேசராக ஒருபத்தொன்பதடியார் மணிவேடத்தாரை வழிபட்டரனை யடைந்தார்
45

கவுணியர் நாவுக்கரசர் பேயார் இம்மூவர் கற்கும் இயல் இசைவல்லோர் இசைத்தமிழ் நூல்வல்லோர்
பவமணுகாத் திருநாளைப்போவார் ஆனாயர் பாணர் பரமனையே பாடுவராக நால்வர்
புவனி புகழ் ஐயடிகள் திருமூலர் காரி பொய்யடிமை இல்லாத தமிழ்ப்புலவர் சேரர்
நவமுடைய இவர்ஐவர் இயல் வல்லோர் நின்ற நாயன்மார் தவம் புரிந்து நற்கதியை யடைந்தோர்
46

இல்லறத்தில் நின்றவர்கள் திருநீலகண்டர் இயற்பகை உள்ளிட்டார் முர்த்தியார் அப்பர்
நல்ல துறவறம் பிரமசாரிகள் சண்டேசர் நானிலத்தில் அரனடியார் தங்களுடன்சேர்ந்
செல்கதி பெற்றவர் ஞான சம்பந்தருடனே திருமணத்தில் ஒருமணமாய்ச் சேர்ந்தவர்கள் அனேகம்
பல்வளஞ்சேர் ஆரூரருடன் சேரர் கையில் பரிஉகைக்க உடன்சென்ற பரிசனமெண்ணிறந்தோர்
47

சிவனடியாருடன் பகையாய் முத்தியடைந்தவர்கள் சேய்ஞலூர் சண்டேசர் பிதா எச்சதத்தன்
கவர்புகழ்சேர் கோட்புலியார் உரைத்த திருவிரையாக் கலிபிழைத்த கிளைபகைத்து(5) நரகினைசென்றடைந்தோர்
தவரான(6) முர்த்தியார் இறைவனுக்குச்சாத்துஞ் சந்தணக்காப்பினை விலக்கி அமண்சமயச் சார்வாய்ப்
புவிபரந்த கருநடமன்னவன் முதலனேகர் புராணகதை யினைப் பிரித்துப் புகல எளிதலவே
/பா.பே. 'பிழைத்து'(5) . 'தவராசர்'(6)/
48

ஆருரர் திருத்தொண்டத் தொகையு஡ரத்த நாளில் அடுத்தொண்டுசெய்தொண்டர் சிலர் அவர்க்கு முன்னே
பேருர் மெய்த் தொண்டுசெய்த பேர் சிலபேர் அவர்க்குப்பிறக திரத்தொண்டுசெய்யும்பேர் சிலபேராகச்
சீருருந் திருத்தொண்டர் புராணத்திற் சேர்த்து சேவையர் கோன் சேர்வைசெயுந் தொண்டர் அளவிரந்தோர்
காரூரும் மணிகண்டர்க் கவரவர்கள் செய்த கைத்தொண்டில்ன் நிலைகரைகண்டுரைக்க எளிதலவே
49

ஓருலகோ ஒருதிசையோ ஒருபதியோ தம்மிலோரு மரபோ ஒருபெயரோ ஒரகாலந்தானோ
பேருலகில் ஒருமைநெறி தருங்கதையோ பன்மைப் பெருங்கதையோ பேர் ஒன்றோ அல்லவே இதனை
ஏர் உலகெலாம் உணர்ந் தோதர்றகரியவன் என்றிறைவன்முன் அடியெடுத்துக் கொடுத்தருளக் கொண்டு
பாருலகில் நாமகள் நின்றெடுத்துக் கைநீட்டப் பாடி முடித்தனர் தொண்டர்சீர் பரவவல்லார்
50

கரங்கடலைக் கைநீத்துக் கொள எளிது முந்நீர்க் கடற்கரையின்(7) நொய்மணலை எண்ணி அளவிடலாம்
பெருங்கடல்மேல் வருந்திரையை ஒன்றிரண்டென் றெண்ணிப் பிரித்தெழுதி கடையிலக்கம் பிரித்துவிடலாகும்
தருங்கலின் மீனை அளவிடலாகும் வானத்தாரகையைஅளவிடலாம் சங்கரன்தாள் தமது
சிரங்கொள் திருத்தொண்டர் புராணத்தை அளவிட நஞ்சேக்கிழார்க் கெளிதலதுதேவர்க்கும் அரிதே
/பா.பே. 'கடற்கரைநுண்'(7)/
51

அறுவதுபேர் தனித்திருப்பேர் கூட்டம் ஒன்பதாக அரனடியார் கதையை
மறுவில் திருநாவலூர்ச் சிவமறையோர் குலத்து வருசடையனார் மனைவி இசைஞானி வயிற்றில்
உறுதிபெற அவதரித்த ஆரூரர் முன்னாள் உரைசெய்த திருத்தொண்டத்தொகைப் பதிகத்தடைவே
நறைமலிபூம் பொழில்புடைசூழ் திருநாரையூரில் நம்பியாண்டார் திருவந்தாதியைக் கடைபிடித்து
52

காண்டம் இரண்டா வகுத்துத் கதைபரப்பைத் தொகுத்து கருதரிய சருக்கங்கள் பதின்மூன்றா நிலையிட்(டு)
ஈண்டுரைத்த புராணத்தில் திருவிருத்தம் நாலாயிரத் திருநூற்ஐம்பத்து மூன்றாக அமைத்துச்
சேண்டகையை திருத்தொண்டர் புராணமெனப் புராணத் திருமுறைக்குத் திருநாமஞ் சீர்மைபெற அமைத்திட்
டாண்டகைமை பெறயெழுதி மைக்காப்புச்சாத்தி அழகுபெறக் கவளிகையும் அமைத்ததில் வைத்ததனபின்
53

"சேவைகாவலர் புராணகதைதொகை செயநினைந்தெமை அகன்றபின்
யாவர் தாம் அருகிருந்த பேர்கள்கதைசென்ற தெவ்வளவிருந்தாங்(கு)
ஆவதென்னி வைகள் அறியவேண்டுமதறிந்து வாரும்" எனவளவர்கோன்
ஏவினார் உரிய தூதர் தூதறியாமல் ஒற்றரையு மேவினான்
54

வென்றி வேல்வளவன் அளவறிந்துவர விட்ட காளையர் "புராணநூல்
ஒன்று பாதிகதை சென்ற(து)" என்று சிலர் ஓடினார் சிலர் உவந்து சென்(று)
"இன்று நாளைமுடியும் புராணம் இனி" என்றுரைத்திட்டு இறைஞ்சினான்
சென்று "நற்கதைமுடிந்தது" என்று சிலர் செம்பியற்குறுதி செப்பினார்
55

வந்து சொன்னவர்கள் அனைவருக்கும் நவமணிகளுந்துகிலும் பொனும்
சிந்தி அள்ளியும் உவந்து விசி உயர் செம்பொன் அம்பல மருங்கில்வாழ்
அந்தி வண்ணர் நடமும் பணிந்து முதலடி எடுத்தவர் கொடுத்திடப்
புந்தி செய்து மகிழ்சேவை காவலர் "புராணமுந் தொழுவன்நான்" எனா
56

வீதிவீதிகள்தொறுந் தொறும் பயணம் என்று வென்றி மணிமுரசறைந்
தோதி வேதியர்கள் எண்ணி இட்ட உயர்நாளும் ஓரையும் முகூர்த்தமும்
போத நாடிவரை புரைகடக்களிறு பரவி தேர் கருவியாள்தரச்
சாதுரங்கமுடனே செலப் பிளிறுநந்தி மேல்கொடு நடந்தனன்
57

தேர்முழக்கொலி மழைக் கடக்கரட சிந்துரக் களிறு பிளிறுசீர்
ஆர்முழக்கொலி பரிசெருக்கொலி பதாதி வந்தெதிர் அடர்ந்தெழும்
போர் முழக்கொலி சழக்கிலாதுயர் படைக்கலன் புணரும் ஓசைஏழ்
கார்முழக்கொலியின் எட்டிரட்டிநிரை கடல்முழக்கென முழக்கெழ
58

வளவர்கோன் வரவறிந்த தில்லைமறையோரும் வண்஡ம மடபதிகளும்
பிளவுகொண்டமதி நுதல்மடந்தையாரும் மற்றுமுள பெரியோர்களும்
களவிலாத மொழிகொடு புராணகதை செய்த கங்கைகுல திலகரும்
தளவமாலை அபயனை எதிர்ந் தினியசாரஆசிபலசாற்றினார்
59

முண்டமான திருமுடியும் இட்ட திருமுண்டமங்கவசமுந்துணைக்
குண்டலங்களும் இரண்டுகாதினுங் வடிந்தலைந்த குழையுந்திருக்
கண்டமாலை கரமாலையுஞ் சிரசுகவின் விளங்வே
தோண்டர்சீர் பரவுவான் அணைந்த சுபசரிதை சோழனெதிர் கண்டனன்
60

கண்டபோதுள மகிழ்ந்து தன்னையறியாது கைகள் தலைமீதுறக்
'கொண்டவேடம் அரனடியார் வேடம் இது குறைவிலாத தவவேடம்' என்
றண்டவாணர் திருவருளை யுன்னி அவர்அடிமை கொண்ட பெருமை நினைந்(து)
எணடயங்கரசர் ஏறு சேவையர் குலாதி பாதுகை இறைஞ்சினான்
61

இறைஞ்சி அம்பலவர் பாத தாமரை இறைஞ்ச எண்ணி வரன்முறையால்
அறஞ்சிறந்த முனிசேவை காவலரும் ஆறைஞ்ஞூறு மறையோர்களும்
துறஞ்சிறந்த மடபதிகளுந்தொடர வந்து மன்னன் அரிபிரமர்பால்
மறைஞ்சு நின்ற பொருள் வெளிப்பட கனகமன்றில் நின்றபடி கண்டனன்
62

கண்டகண்அருவி தாரை கொள்ள இருகைகள் அள்சலிகொள �