அன்பே சிவம்

அன்பே சிவம்
அன்பே சிவம்

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக , நான் இணையத்தில் அலைந்தபோது படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடைந்து  விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நாட்கள்  என்பது மிக அதிகமான காலம் , அதனால், இதை நாம் கல் உருவாவதை தடுக்கும் முன் எச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதி உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல்  உருவாவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள  ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினைக்கு  நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம்  பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப்  பிழிந்து, ஒரு டேபிள்  ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாறுடன்  ( குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிறில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொள்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம். .

வாழைத் தண்டு ஜூஸ் : வாழத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை மற்றும்  கல் உருவானதை உடைக்கும்(diffuse) திறன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை இல்லையெனில் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.


டிஸ்கி 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொறுக்க முடியாதவர்கள் டாக்டரிடம்  சென்றுவிடுவதே நல்லது.

டிஸ்கி 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக