அன்பே சிவம்

அன்பே சிவம்
அன்பே சிவம்

வெள்ளி, 7 ஜனவரி, 2011

ஸ்ரீருத்ராக்ஷ மகிமை

சிவநாமத்தை விரல் விட்டு எண்ணுவதை விட ருத்ராக்ஷமணிகளால் எண்ணுவது விசேஷம். ருத்ராக்ஷத்தின் மகிமை அளவில்லாப் பெருமை பெற்றது. ஈசனுக்கு உகந்தது ருத்ராக்ஷமும், திருவெண்ணீறும் தான்.

ஒரு சுப முஹூர்த்த வேலையில் சதாசிவ மூர்த்தியான திருச்சடைப் பெருமானின் மூன்று திருநேத்ரங்களில் இருந்து கோடிக்கணக்கான சூரியகாந்தியின் பேரொளிப் பிரகாசம் தோன்றியது.

மூன்று கண்களிலிருந்தும் பனி நீர்த் துளிகள் முத்திட்டு தெறித்து வீழ்ந்தன. அன்று ஆறுமுகன் தோன்ற நுதல் விழியினின்று எழுந்தன ஆறு தீப்பொறிகள். இன்று ருத்ராக்ஷம் தோன்ற தண்துளிகள் சிந்தின.

சங்கரன் கண்களில் இருந்து தெறித்து வீழ்ந்த நீர்த்துளிகள் நிலத்தில் வீழ்ந்து ருத்ராக்ஷ விருக்ஷங்களாக மாறின.

அந்த அற்புதத்தைக் கண்டு, தேவர்களும் சிவகணத்தவர்களும், முனிவர்களும், சிவபெருமானின் சேவடிக் கமலங்களைப் போற்றித் துதி செய்தனர்.

லோகக்ஷேமத்துக்காக ஈசன் வித விதமான ருத்ராக்ஷங்களை சிருஷ்டித்துள்ளார். இந்த விருக்ஷங்களில் இருந்து முப்பத்து எட்டு வகையான ருத்ராக்ஷங்கள் தோன்றின.

சிவபெருமானின் வலக்கண்ணாகிய சூரியன் எனப்படும் திருவாயில் இருந்து கபில நிறத்தோடு தோன்றிய நீர்த்துளிகள் பன்னிரண்டு வகையான பேதங்களோடு கூடிய ருத்ராக்ஷங்களாக விளங்கின.

இடக் கண்ணாகிய சந்திரன் எனும் திருவாயில் இருந்து தோன்றிய வெண்ணிறத்தோடு கூடிய நீர்த்துளிகள் பதினாறு வகையான பேதங்களோடு கூடிய ருத்ராக்ஷங்களாக விளங்கின.

ருத்ராக்ஷங்களை அணிபவர் முறைப் படி சிவ பூசை செய்து, ''ஓம் நமசிவய'' எனும் சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தை ஓத வேண்டும்.

பலவிதமான ருத்ராக்ஷன்களைப் பற்றி கீழே காணலாம்.ஏகமுக ருத்ராக்ஷம்:

சிவ சொரூபம். இதனை அணிவதால் ப்ரும்மஹத்தி தோஷம் நிவர்த்தி ஆகிறது.

இருமுக ருத்ராக்ஷம்:

தேவ தேவனாகிய சிவசக்தி வடிவான ஸ்ரீ அர்த்த நாரீஸ்வர சொரூபமாகும். இதனை அணிவதால் புத்தி பூர்வம், அபுத்தி பூர்வம் என்னும் இரண்டு வகையான பாப வினைகள் நீங்குகிறது.

மூன்று முக ருத்ராக்ஷம்:

ஸ்ரீ திரேதாக்கினி ஸ்வரூபம். இதனை அணிவதால் ஸ்திரீஹத்தி (பெண்கொலை பாவம்) தோஷ நிவர்த்தி உண்டாகும்.

நான்கு முக ருத்ராக்ஷம்:

ஸ்ரீ பிரம்மா ஸ்வரூபம். இந்த ருத்ராக்ஷத்தை அணிவதால் நரஹத்தி தோஷ நிவர்த்தி உண்டாகும்.

ஐந்து முக ருத்ராக்ஷம்:

ஸ்ரீ காலாக்னி ருத்ர ஸ்வரூபம்; இதனை அணிபவருக்கு சிவ அனுக்ரகம் கிட்டும்.

ஆறுமுக ருத்ராக்ஷம்:

ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வரூபமானது. ஆறுமுக ருத்ராக்ஷத்தை அணிவதால் பிரம்மஹத்தி தோஷம் விலகும். ஸ்ரீ சுப்பிரமணியர்- ஸ்ரீ விநாயகர் அருள் கிட்டும். இதனை வலது காதில் குண்டலமாகவோ அல்லது வலது புஜத்தில் அணிவது விசேஷ பலன்களைக் கொடுக்கும்.

ஏழுமுக ருத்ராக்ஷம்:

ஸ்ரீ ஆதிசேஷன் ஸ்வரூபம். இதனை அணிவோர்க்கு பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி உண்டாகும். பெரும் சம்பத்து, ஆரோக்கியம், ஐசுவரியம், ஞானம், வாக்குத் தூய்மை போன்ற நல்ல சுகபோகங்கள் வாய்க்கும்.

எட்டுமுக ருத்ராக்ஷம்:

இது ஸ்ரீ மஹாகணபதி ஸ்வரூபம். அஷ்ட வசுக்களை தெய்வமாகக் கொண்ட எட்டுமுக ருத்ராக்ஷத்தை தரிப்பவர்களுக்கு பலவகையான தோஷங்கள் நீங்குகின்றன.

ஒன்பதுமுக ருத்ராக்ஷம்:

இதனை ஸ்ரீ காலபைரவ ருத்ராக்ஷம் எனவும் கூறுவார். இது சிகப்பு நிறமுடையதாக இருக்கும். இதன் அதிர்ஷ்ட தேவதை அம்பிகை. இதனை இடது கையில் தரிப்பவர்கள் சிவ ரூபமாகவே கருதப்படுகிறார்கள். புத்தி முத்திகளை கொடுக்க வல்லது.

பத்துமுக ருத்ராக்ஷம்:

இது விஷ்ணு ச்வரூபமாகும். தச திக்குகளுக்கு தேவதைகளின் சொரூபமாக விளங்கும் இந்த ருத்ராக்ஷத்தை தரிப்பவர்களுக்கு அந்தந்த தேவதைகளின் ப்ரீதி கிட்டும். கிரஹதோஷங்களையும், பூத பேய் பிசாசுகளை விரட்டும். சர்ப்ப விஷங்களையும் போக்கும்.

பதினோரு முக ருத்ராக்ஷம்:

இது ஸ்ரீ ஏகாதச ருத்ரரின் ச்வரூபமாகும். இந்த ருத்ராக்ஷத்தின் பதினொரு முகங்களும் பதினொரு ருத்ர ஸ்வரூபங்களைக் குறிக்கும். அவை: போலி - பிங்கள - பீம - விரூபாக்ஷ - வியோகித - சாஸ்தா - அஜபாத - அஹிர்புத்தீய - சம்பு - சண்ட - பவ. இதனை சிரசில் தரிப்பதால் ஆயிரம் அஸ்வமேத யாகங்களை நடத்திய பலனும், கோடி கோதானம் செய்த பலனும் உண்டாகும்.

பன்னிருமுக ருத்ராக்ஷம்:

ஸ்ரீ துவாதசாதித்யர் ஸ்வரூபம். இதனை அணிபவருக்கு ஸ்ரீமகாவிஷ்ணுவின் ப்ரீதி உண்டாகும். கோமேதகம், அஸ்வமேத யாகம் செய்த பலன்கள் உண்டாகும். துஷ்ட மிருகங்களால் துன்பம் ஏற்படாது. இதனைக் காதுகளில் அணிவது விஷேஷ பலனைத் தரும்.

பதின்மூன்றுமுக ருத்ராக்ஷம்:

இந்திர ஸ்வரூபம். இந்த ருத்ராக்ஷத்தை ஸ்ரீசதாஷிவ ஸ்வரூபம் என்றும் ஸ்ரீ ஷண்முக ஸ்வரூபம் என்றும் கூறுவர். இந்த ருத்ராக்ஷ மாலையை அணிவதால் சர்வ கார்ய சித்தி உண்டாகும்.

பதிநான்குமுக ருத்ராக்ஷம்:

இந்த ருத்ராக்ஷத்தை ஸ்ரீ ருத்ரமூர்த்தி சொரூபம் எனவும், ஸ்ரீஹனுமான் சொரூபம் எனவும் கூறுவர். இது கிடைப்பது மிகவும் அரிது. இந்த ருத்ராக்ஷம் யாருக்கு கிடைக்கிறதோ அல்லது யார் தரிக்கிரார்களோ அவர

2 கருத்துகள்: